சாதனை இளம்பெண்ணிடம் ஷேவிங் செய்து கொண்ட சச்சின்.. வைரலாகும் போட்டோ!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சலூன் கடை நடத்தி வரும் சகோதரிகளின் கடைக்குச் சென்ற சச்சின் டெண்டுல்கர் அவர்களது கடையில் ஷேவிங் செய்து கொண்டார். பின்னர் அந்த சகோதரிகளுக்கு நிதியுதவியையும் கொடுத்தார்.
பன்வாரி தோலா என்ற கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகள் நேஹா மற்றும் ஜோதி. இவர்களது தந்தை சலூன் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் அவர் 2014-ஆம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவரால் கடையை நடத்த முடியாமல் தவித்தார். இதையடுத்து நேஹா மற்றும் ஜோதி ஆகிய இருவரும் அந்த சலூன் கடையை தங்கள் பொறுப்பில் எடுத்து நடத்தி வருகின்றனர்.

வீட்டுச் செலவு
தங்களது கடைக்கு பார்பர்ஷாப் கேர்ள்ஸ் என பெயரிட்டுள்ளனர். இந்த சலூனையும் அவர்கள் நடத்தி வருகின்றனர். இந்த வருமானத்தின் மூலம் தந்தையின் சிகிச்சை செலவையும் வீட்டுச் செலவையும் கவனித்து வருகின்றனர்.

ஷேவிங்
இந்த நிலையில் இந்த விவகாரத்தை கேள்விப்பட்ட சச்சின் டெண்டுல்கர் இவர்களது கடைக்கு சென்று ஷேவிங் செய்து கொண்டார். அவருக்கு நேஹா ஷேவிங் செய்தார்.

பெண்களிடம்
அத்துடன் சச்சின் விளம்பரத் தூதுவராக இருக்கும் ஜில்லெட் நிறுவனம் சார்பில் அந்த சகோதரிகளுக்கு வழங்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் தேவைக்கான நிதியுதவியை சச்சின் அந்த பெண்களிடம் வழங்கினார்.

சகோதரிகள்
இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் தங்கள் கடைக்கு வந்து ஷேவிங் செய்து கொண்டு நிதியுதவியை வழங்கியதை கண்டு சகோதரிகள் நெகிழ்ச்சி அடைந்தனர். சச்சின் ஷேவிங் செய்து கொண்ட படம் வைரலாகியுள்ளது.












Click it and Unblock the Notifications