சிவசேனாவின் பர்தா தடை கோரிக்கை அரசியலமைப்பிற்கு விரோதம்..ஷியா வக்ஃப் வாரியம் கண்டனம்
லக்னோ: இந்தியாவில் பொது இடங்களில் பர்தா அணிவதை தடை செய்ய வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்கைக்கு, உத்திரப்பரதேச ஷியா வக்ஃப் வாரியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள அந்த அமைப்பின் தலைவர் வாசிம் ரிஸ்வி, சிவசேனாவின் கோரிக்கை பொறுப்பற்றது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என கண்டனம் தெரிவித்துள்ளார் பர்தா அணிய வேண்டுமா இல்லையா என்பது இஸ்லாமிய பெண்களின் விருப்பம் என்றார்

பர்தா அணிய தடை என்ற உத்தரவை பிறப்பிக்க ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலை நடத்த உத்தரவிடுவதை காட்டிலும் பன்மடங்கு தைரியம் வேண்டும் ஆனால் இலங்கை அதிபரோ ஒரே இரவில் பொதுஇடங்களில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவதை தடை செய்து உத்தரவிட்டு விட்டார் என கூறி இலங்கை அதிபரின் இந்த செயலை சிவசேனா வரவேற்றுள்ளது
பர்தா அணிவதை தடை செய்ய கோருபவர்கள் பாரம்பரியம் மற்றும் பழக்கவழக்கங்களுக்கான வித்தியாசத்தை உணராமல் குழம்பியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது, பர்தா விவகாரத்தை பலதாரமணம், முத்தலாக் போன்று எளிதாக திருத்தி விடலாம் என நினைப்பதாக இஸ்லாமிய பெரியவர்கள் சாடியுள்ளனர்.
மேலும் இந்த நடைமுறைகளுக்கு எதிராக எந்த குரல் எழுப்பப்பட்டாலும், உடனடியாக இஸ்லாம் மதம் ஆபத்தில் உள்ளது தேசியவாதத்தை விட மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுவதாக சிவசேனா கூறியுள்ளது
சிவசேனா தற்போது கையில் எடுத்துள்ள பர்தா தடை விவகாரம், தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தே்ாதல் நடைபெற்று வரும் நிலையில், மீதமுள்ள தொகுதிகளில் வாக்குப்பதிவு விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் சிவசேனாவின் கருத்து வாக்குப்பதிவில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பார்ப்போம்
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications