சுவாமி சின்மயானந்தா இனி எங்கள் கட்சி உறுப்பினரே கிடையாது.. பாஜக அதிரடி அறிவிப்பு
லக்னோ: சட்டக்கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுவாமி சின்மயானந்தா இனி எங்கள் கட்சி உறுப்பினர் கிடையாது என .உத்தரப்பிரதேச பாஜக செய்திதொடர்பாளர் ஹரிஸ்ஷ்சந்த்ரா ஸ்ரீவஷ்தவா தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு ஆசிரமங்களையும், கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருபவர் சின்மயானந்தா.
இவர் 1999ம் ஆண்டு வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்தவர் ஆவார். உத்தரப்பிரதேச மாநில பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

மாணவி பாலியல் புகார்
அம்மாநிலத்தில் செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவராக விளங்கி வரும் சின்மயனந்தா மீது அவருக்கு சொந்தமான சட்டக்கல்லூரியில் பயின்ற மாணவி பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தினார்.

சிறப்பு குழு விசாரணை
தன்னை சின்மயானந்தா பலவந்தமாக அடைத்து வந்து இரண்டு ஆண்டுகளாக பலாத்காரம் செய்ததாக புகார் கூறினார். இது தொடர்பான வீடியா வைரலான நிலையில் உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு குழு விசாரித்து வருகிறது.

சட்டக்கல்லூரி மாணவியும் கைது
இதையடுத்து மாணவி அளித்த புகாரின் பேரில் சின்மயானந்தா கடந்த 20ம் தேதி கைது செய்யப்பட்டார். அதேநேரம் சட்டக்கல்லூரி மாணவியும் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். சின்மயனாந்தாவை பணம் கேட்டு மிரட்டும் நோக்கில் புகார் அளித்ததாக கைது செய்துள்ளனர்.

உபி பாஜக அறிவிப்பு
இந்த சூழ்நிலையில், உத்தரப்பிரதேச பாஜக செய்திதொடர்பாளர் ஹரிஸ்ஷ்சந்த்ரா ஸ்ரீவஷ்தவா கூறுகையில், சுவாமி சின்மயானந்தா இனி பாஜகவின் உறுப்பினரே கிடையாது. கட்சியின் எல்லா ஆணவங்களும் இப்போது டிஜிட்டல் மயமாகிவிட்டது. பாஜகவில் இல்லாத போது அவரை பற்றி எதுவும் சொல்ல முடியாது என்றார்.

பாஜகவில் இருந்து நீக்கம்
சின்மயானந்தா பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய நிலையில் அவரால் கட்சிக்கு கெட்ட பெயர் வரும் என்பதால், அவரை கட்சியின் உறுப்பினரே கிடையாது என்று சொல்லி பாஜக விலக்கி வைத்துள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications