3 நாள் கங்கை பயணம் முடிகிறது.. மோடியின் கோட்டையில் பிரியங்கா காந்தி.. வாரணாசியில் இன்று கூட்டம்!
காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச மாநில கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று வாரணாசி தொகுதியில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.
லக்னோ: காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச மாநில கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று வாரணாசி தொகுதியில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.
அந்த மூன்று நாள் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரம் முடிவிற்கு வருகிறது. முழுக்க முழுக்க கங்கையில் பிரச்சாரம் செய்த உத்தர பிரதேச மாநில கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் பிரச்சாரம் இன்று முடிவுக்கு வருகிறது.
கடைசி நாளான இன்று அவர் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். அவர் வாரணாசியில் இன்று என்ன பேசுவார் என்று பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மூன்று நாள் முன்
பிரியங்கா காந்தி நேற்று முதல்நாள் இந்த உத்தர பிரதேச பிரச்சாரத்தை தொடங்கினார். கங்கை நதியில் பூஜை செய்து, வழிபாடு நடத்தி பிரச்சாரத்தை தொடங்கினார். அதன்பின் பிரயாகராஜில் (அலஹாபாத்) இருந்து கப்பலில் வரிசையாக பல இடங்களில் படகு மூலமே சென்றார்.

வழிபாடு
இந்த மூன்று நாட்களில் பிரியங்கா காந்தி பல கோவில்களில் வழிபாடு நடத்தினார். கங்கை நதியில் பயணம் செய்த இவர் கரைகளில் இறங்கி வந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார். உத்தர பிரதேசத்தில் இருக்கும் முக்கிய வழிபாட்டு தளங்களில் எல்லாம் சென்று வழிபாடு நடத்தினார்.

மக்களிடம் பேசினார்
அதேபோல் பல்லாயிரக்கணக்கான மக்களிடமும் இவர் பேசினார். முக்கியமாக பெண்களிடம் அதிகம் பேசினார். ஆனால் மேடை போட்டு எங்கும் பிரச்சார கூட்டங்களை நடத்தவில்லை. முக்கியமாக மீனவ மக்கள், கங்கையை நம்பி இருக்கும் மக்கள், தலித் மக்களிடம் இவர் அதிகம் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வாரணாசி
இந்த நிலையில் இன்று பிரியங்கா காந்தி வாரணாசி வர இருக்கிறார். பிரியங்காவின் 145 கிமீ தூர கங்கை படகு பிரச்சாரம் இன்றோடு முடிகிறது. வாரணாசியில் கோவில்களில் சென்று வழிபடும் இவர் பெரிய பிரச்சார கூட்டத்தை நடத்த இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications