காலிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை.. உத்தரபிரதேச போலீசார் அதிரடி
லக்னோ: பஞ்சாபில் போலீஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் பயங்கரவாதிகள் மூன்று பேர், உத்தர பிரதேசத்தில் இன்று அதிகாலை போலீசார் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பேரிடமும் இருந்து ஏகே 47 ரைபிள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. உத்தர பிரதேசத்தில் இன்று அதிகாலையில் நடைபெற்ற என்கவுண்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிலிபட் மாவட்டத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற என்கவுண்டரில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டனர். சுடுக்கொல்லப்பட்டவர்களின் அடையாளமும் தெரியவந்துள்ளது. குர்வீந்தர் சிங் ( வயது 25), வீரேந்திர சிங் என்ற ரவி (23), ஜஸ்பிரித் சிங் என்ற பிரதாப் சிங் (18) ஆகிய மூன்று பேரும்தான் போலீசாருடனான துப்பாக்கிச்சண்டையில் உயிரிழந்தது தெரியவந்தது.

இந்த மூன்று பேரும் தடை செய்யப்பட்ட இயக்கமான காலிஸ்தான் கமோண்டா ஃபோர்ஸ் என்ற இயக்கத்தை சேர்ந்தவர்கள். பஞ்சாபின் குருதாஸ்பூரில் காவல் நிலையங்கள் மீது கையறி குண்டு வீசியதில் இந்த மூன்று பேருக்கும் தொடர்பு இருப்பதாக உத்தர பிரதேச போலீசார் தெரிவித்தனர். சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பேரிடமும் இருந்து ஏகே 47 ரைபிள்ஸ், இரண்டு பிஸ்டல்கள், துப்பாக்கி குண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.
முன்னதாக பிலிபட் மாவட்டத்தில் உள்ள புரன்புர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிக்குள், மேற்கூறிய மூன்று பேரின் நடமாட்டமும் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்து இருந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள், காவல்துறையினரை நோக்கி தாக்கியுள்ளனர்.
இதையடுத்து உஷாரான போலீசார், பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நீடித்த இந்த பயங்கர துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள் மூன்று பேரும் கொல்லப்பட்டு இருப்பதாக உத்தர பிரதேச போலீசார் கூறினர். இந்த எண்கவுண்டர் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் உயரதிகாரிகள் கூறினர்.
முன்னதாக கடந்த 21 ஆம் தேதி சனிக்கிழமை பஞ்சாப்பின் குர்தாஸ்பூரில் உள்ள கலனாவூர் சப் டிவிஷனுக்குட்பட்ட காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருந்தனர். இந்த நிலையில், இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களாக சொல்லப்படும் மூன்று பேரும் உத்தர பிரதேசத்தில் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளனர்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட்












Click it and Unblock the Notifications