பட்டேல் சிலையை தொடர்ந்து ராமருக்கும் பிரம்மாண்ட உயர சிலை.. உ.பி முதல்வர் யோகி அறிவிப்பு!
குஜராத்தில் நிறுவப்பட்டு இருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் பெரிய ராமர் சிலை நிறுவ பாஜக கட்சி திட்டமிட்டுள்ளது.
லக்னோ: குஜராத்தில் நிறுவப்பட்டு இருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் பெரிய ராமர் சிலை நிறுவ பாஜக கட்சி திட்டமிட்டுள்ளது.
குஜராத்தில் நிறுவப்பட்டிருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி கடந்த வாரம் திறந்து வைத்துள்ளார். இந்த சிலை ஒற்றுமைக்கான சிலை (Statue Of Unity)என்று அழைக்கப்படுகிறது.
இந்த சிலைதான் உலகிலேயே மிகவும் உயரமான சிலை ஆகும். இந்த நிலையில் தற்போது உத்தர பிரதேசத்தில் பெரிய ராமர் சிலை நிறுவப்பட இருக்கிறது.

ராமருக்கு சிலை
இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் ராமருக்கு சிலை வைக்க திட்டமிட்டு இருக்கிறார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். அயோத்தியில் இந்த ராமர் சிலை வைக்கப்பட உள்ளது. மிகவும் பிரமாண்டமாக இந்த சிலையை கட்ட இருக்கிறார்கள்.

என்ன சிறப்பு
ராமர் கோவில் இல்லாமல் இந்த சிலை தனி சுற்றுலாதலமாக இருக்கும். இந்த சிலை அயோத்தியில் ராமர் கோவில் கட்ட திட்டமிடப்பட்டு இருக்கும் பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் கட்டப்பட இருக்கிறது. இதன் உயரம் 151 மீட்டர் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

அறிவிப்பு எப்போது
இதுகுறித்த முறையான அறிவிப்பு வரும் தீபாவளி அன்று வெளியிடப்படும். வடஇந்தியாவில் புதன் கிழமை தீபாவளி கொண்டாடப்படுகிறது. அன்று உத்தர பிரதேசத்தில் தீபாவளி கொண்டாட பெரிய அளவில் ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளது . அன்று முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த அறிவிப்பை வெளியிட உள்ளார்.

கோரிக்கை வைக்கிறார்கள்
இந்த நிலையில் இந்த சிலையை சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை விட அதிக உயரத்தில் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். பட்டேல் சிலையின் உயரம் 182 மீட்டர் ஆகும். அதைவிட அதிக உயரத்தில் இந்த சிலையை கட்ட வேண்டும் என்று அங்குள்ள இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளது.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications