உ.பி.யில் உச்சகட்ட கோரத்தாண்டவம்- ஒரே நாளில் 37,238 பேருக்கு கொரோனா; 196 பேர் மரணம்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் இன்று ஒருநாளில் மட்டும் 37,238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 196 பேர் கொரோனாவுக்கு ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கொரோனா பாதிப்பு மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழகத்துக்கு அடுத்ததாக 5-வது இடத்தில் இருக்கிறது உத்தரப்பிரதேசம். உத்தரப்பிரதேசத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு என்பது 30 ஆயிரத்தை கடந்ததாக இருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமையன்று 34, 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 195 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். லக்னோவில் அதிகபட்சமாக 5,239 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது
தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 13,776 பேருக்கு கொரோனா பாதிப்பு- 78 பேர் மரணம்; 8078 பேர் டிஸ்சார்ஜ்
.
இன்று கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 37, 238 பேருக்கு கொரோனா உறுதியானது. அத்துடன் 196 பேர் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியாகினர். கடந்த 24 மணிநேரத்தில் இம்மாநிலத்தில் 22,566 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 2,73, 653 ஆக உள்ளது. லக்னோவில் கடந்த 24 மணிநேரத்தில் 5682 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications