பேரவலத்தின் பிடியில் உத்தரப்பிரதேசம்.. ஒருநாள் கொரோனா பாதிப்பு 40,000-த்தை நெருங்கியது- 223 பேர் பலி
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 40,000-த்தை நெருங்கியுள்ளது. உ.பி.யில் சனிக்கிழமை மட்டும் 38,055 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் ஒரே நாளில் 233 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
நாட்டில் கொரோனா பரவலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. கேரளா, கர்நாடகா, தமிழகத்தைத் தொடர்ந்து 5-வது இடத்தில் உத்தரப்பிரதேசம் உள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் காட்டுத் தீயாக கொரோனா பரவல் இருக்கிறது. சனிக்கிழமையன்று ஒரே நாளில் உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 38,055 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அம்மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,51,314 ஆக அதிகரித்தது.
அதேபோல் உத்தரப்பிரதேசத்தில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 10,959 பேர் இதுவரை அம்மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
அம்மாநிலத்தில் லக்னோ நகரம்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரே நாளில் 5,461 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் 2,786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications