தாயையும் மகளையும் ஒரே இடத்தில் வைத்து.. இளைஞர் செய்த கொடூரம்..மூன்றாவது பெண் நூலிழையில் எஸ்கேப்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் 19 வயது பெண்ணையும் அவரது மகளையும் வீட்டில் வைத்த வாலிபர் ஒருவர் கொன்ற சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்தப் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

UP Teen Killed By Man Who Wanted To Marry Her, Mother Also Murdered

இது இரண்டு வீட்டாருக்கும் பிடிக்கவில்லை. இதன் காரணமாக இரு குடும்பங்களும் இடையே கடந்த நாட்களாக தொடர்ந்து சண்டை நடைபெற்றது. மேலும், அப்பெண்ணின் குடும்பத்தினர் அவரை வேறு ஒருவருக்கு நிச்சயம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், நேற்றிரவு அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கிருந்த பெண்ணையும் அவரது தாயாரையும் கொடூரமாக வெட்டியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

அவர்களைக் காப்பாற்ற வந்த உறவினர் பெண்ணையும் அந்த நபர் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அவர், தற்போது சிகிச்சையாக உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து ஆக்ரா ஐஜி சதீஷ் கணேசன் கூறுகையில், "பக்கத்து வீட்டில் வசிக்கும் கோவிந்த் என்ற நபர் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார்.

அவர் இக்குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்துள்ளான். அதைத்தொடர்ந்தே இந்த கொலைகள் நடந்துள்ளன. குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+