21 ஆண்டுகளாக உல்லாசம்.. திருமண ஆசைக்காட்டி 36 வயது நர்சை பலாத்காரம் செய்த 59 வயது நபர்!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி 21 ஆண்டுகளாக நர்சை பாலியல் பலாத்காரம் செய்து வந்த லேப் டெக்னீசியனை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பதோகி மாவட்டத்தை சேர்ந்தவர் சிந்தாமணி சர்மா (வயது 59). இவர் பதோகியில் மாவட்ட சுகாதாரத்துறையில் பணியாற்றி வருகிறார்.

சிந்தாமணி சர்மா லேப் டெக்னீஷியனாக வேலை செய்து வருகிறார். இவருக்கும் 36 வயது நிரம்பிய நர்ஸாக பணியாற்றும் பெண்ணுக்கும் சிறு வயதில் இருந்தே பழக்கம் இருந்தது.
சிந்தாமணி சர்மா மற்றும் 36 வயது நிரம்பிய நர்ஸ் ஆகியோர் சிறுவயதில் வாரணாசியில் வசித்தனர். இருவரின் குடும்பமும் ஒரே அபார்ட்மெண்ட்டில் தனித்தனி வீடுகளில் இருந்தனர். அப்போது சிந்தாமணி சர்மா, நர்ஸ் குடும்பத்துக்கு பொருளாதார ரீதியாக உதவினார். அதுமட்டுமின்றி நர்ஸின் படிப்புக்கும் உதவி செய்து வந்தார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
முதலில் அவர்கள் நண்பர்களாக பழகினர். அதன்பிறகு அவர்கள் இடையேயான உறவு என்பது இன்னும் நெருக்கமாகி உள்ளது. சிறுவயது என்பதால் அவரை சிந்தாமணி சர்மா மிரட்டி பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார். இதனால் அவர் வெளியே சொல்லவில்லை.
அதன்பிறகு சில ஆண்டுகளுக்கு பிறகு பிளானை மாற்றிய சிந்தாமணி சர்மா, திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி உல்லாசமாக இருந்துள்ளார். அதன்பிறகு அவர் நர்ஸை திருமணம் செய்து கொள்ளாமல் ரகசியமாக இன்னொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். அதன்பிறகும் கூட தனது திருமணத்தை மறைத்து நர்ஸிடம் அவர் உல்லாசம் அனுபவித்துள்ளார். இதற்கிடையே தான் நர்ஸுக்கு உண்மை தெரியவந்தது.
இதுபற்றி நர்ஸ் கேட்டதற்கு சிந்தாமணி சர்மா அவரை அடித்து துன்புறுத்தி உள்ளார். அதுமட்டுமின்றி அவரது வீட்டை சூறையாடி உள்ளார். இதனால் மனம் நொந்துபோன நர்ஸ் தனக்கு திருமண ஆசை காட்டி 21 ஆண்டுகள் பாலியல் பலாத்காரம் செய்ததாக சிந்தாமணி சர்மா மீது போலீசில் புகாரளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிந்தமாணி சர்மாவை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications