5 கிலோ உருளைக்கிழங்கு லஞ்சம் கேட்ட உ.பி போலீஸ் – வெளியான ஆடியோ.. அங்க ஒரு டிவிஸ்ட்
லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளர் ஒருவர் 5 கிலோ உருளைக்கிழங்கு லஞ்சம் கேட்டதாக பகீர் ஆடியோ வெளியாகியுள்ளது. இந்த ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அதில் உருளைக்கிழங்கு என்கிற வார்த்தையில் ஒரு டிவிஸ்ட் உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் பவல்புர் சபுன்னா சௌகி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ராம் கிருபால் சிங். இவர் விவசாயி ஒருவரின் பிரச்னைக்காக, அவரிடம் பேசும் ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது. அதில் ராம் கிருபால் விவசாயியிடம் அவரின் கோரிக்கையை நிறைவேற்ற 5 கிலோ உருளைக்கிழங்கு வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு விவசாயி 5 கிலோ முடியாது 2 கிலோ உருளைக்கிழங்கு தருகிறேன் என்று கூறுகிறார்.

இதுகுறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதமாகி, கடைசியில் 3 கிலோ உருளைக்கிழங்கு டீலிங்குடன் உடன்பாடு ஏற்படுகிறது. இந்த ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. “விவசாயியிடம் உருளைக்கிழங்கு லஞ்சம் கேட்கும் போலீஸ்.” என்று நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த ஆடியோ காவல்துறை வட்டாரங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள கண்ணுஜ் காவல்துறை, “இது சம்மந்தமாக உதவி ஆய்வாளர் ராம் கிருபாலை உடனடியாக சஸ்பெண்ட் செய்துள்ளோம். இதுகுறித்து காவல்துறை துறைரீதியான விசாரணையையும் தொடங்கியுள்ளது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார். இதனிடையே ராம் கிருபால் குறிப்பிட்ட உருளைக்கிழங்கில் ஒரு டிவிஸ்ட் உள்ளது. உண்மையில் அவர் உருளைக்கிழங்கை லஞ்சமாக கேட்கவில்லையாம். உருளைக்கிழங்கு என்பது லஞ்சம் தொடர்பாக பயன்படுத்தப்படும் ஒருவித கோட்வேர்ட் என்கின்றனர் காவல்துறையினர்.












Click it and Unblock the Notifications