பொய்யாக பலாத்கார புகார் தந்த பெண்.. 4 வருடம் ஜெயில் + ரூ.5 லட்சம் ஃபைன்.. போட்ட நீதிமன்றம்! பரபரப்பு
லக்னோ: இளைஞர் ஒருவர் மீது பொய்யாக பாலியல் புகார் கொடுத்த 21 வயது பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை பரேலி நீதிமன்றம் வழங்கி உள்ளது.
2019 இல் பதிவு செய்யப்பட்ட கடத்தல் மற்றும் பலாத்கார வழக்கில் பொய் சாட்சியம் அளித்ததற்காக 21 வயது பெண்ணுக்கு பரேலியில் உள்ள நீதிமன்றம் கடுமையான சிறை தண்டனை விதித்தது. அவரது தண்டனைக் காலம் - நான்கு ஆண்டுகள், எட்டு மாதங்கள் மற்றும் ஆறு நாட்கள் ஆகும்.

என்ன நடந்தது?: 2019ல் இந்த பலாத்கார புகார் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த பெண் இளைஞர் மீது பலாத்கார புகார் வைத்துள்ளார். தன்னை அந்த இளைஞர் கடத்தி பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த இளைஞருக்கு நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதையடுத்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் அந்த பெண்ணிடம் மீண்டும் விசாரணை செய்யப்பட்டது.
இந்த விசாரணையில் அந்த பெண் சாட்சியங்களை மாற்றி மாற்றி கூறியுள்ளார். முதலில் சொன்ன விஷயங்கள் பலவற்றை மாற்றி பேசி உள்ளார். அதேபோல் அந்த இளைஞரும் சம்பவம் நடந்த நேரத்தில் வேறு இடத்தில் இருந்துள்ளார்.
மாற்றி பேசினார்: இந்த வழக்கில் ஆஜரான அரசு வக்கீல் சுனில் பாண்டே, "கோர்ட் விசாரணையின் போதும், போலீஸ் நடத்திய குறுக்கு விசாரணையின் போது அந்த பெண் முன்பு கூறியதை மாற்றி மாற்றி பேசினார். தொடர் விசாரணையில் தான் சொன்னது பொய் என்று ஒப்புக்கொண்டார்.
அந்த வாலிபர் தன்னை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுவதை அவர் பொய் என்று ஒப்புக்கொண்டார். அவரை பழி வாங்க வேண்டும் என்று பொய்யாக புகார் கொடுத்ததாக அந்த பெண் ஒப்புக்கொண்டார். பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து சிறையில் சில காலம் இருந்த அந்த இளைஞர் விடுதலை செய்யப்பட்டார். ஐபிசி பிரிவு 195 (ஒரு குற்றத்திற்கு தண்டனை வாங்கும் நோக்கத்துடன் தவறான ஆதாரங்களை வழங்குதல் அல்லது புனையுதல்) கீழ் நீதிமன்றம் பெண்ணை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.
தண்டனை; முன்னதாக பலாத்கார வழக்கில் அந்த இளைஞருக்கு வழங்கப்பட்ட அதே தண்டனை தற்போது அந்த பெண்ணுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 25 வயது இளைஞன் சிறையில் இருந்த அதே நான்கு ஆண்டுகள், எட்டு மாதங்கள் மற்றும் ஆறு நாட்கள் சிறை தண்டனையாக அந்த பெண்ணுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
மேலும், அந்த பெண்ணுக்கு ரூ.5.88 லட்சம் அபராதம் விதித்ததுடன், அதை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற விதியுடன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தொகையை வழக்கில் சிக்கி சிறை தண்டனை பெற்ற நபருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த அபராதம் 5,88,822.47 ரூபாய் உத்தர பிரதேச அரசு விதியின்படி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. திறமையற்ற தொழிலாளர்களுக்கு உத்தரபிரதேச அரசு நிர்ணயித்த தினக்கூலியின் அடிப்படையில் இந்த அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அரசு வழக்கறிஞர் சுனில் பாண்டே தெரிவித்தார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications