ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்துக்கள் பூஜை நடத்தியதற்கான ஆதாரங்கள் எங்கே? கேட்கிறது வாரணாசி கோர்ட்
லக்னோ: சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதி பகுதியில் இந்து தெய்வங்களை 1993-ம் ஆண்டு வரை வழிபட்டதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று வாரணாசி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏகே விஷ்வேஷ் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் காசி விஸ்வநாதர் கோவில் அருகே உள்ள ஞானவாபி மசூதி. இந்த ஞானவாபி மசூதி வளாகத்தின் சிருங்கார் கவுரி அம்மனை வழிபட அனுமதி கோரி 5 இந்து பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த வாரணாசி நீதிமன்றம், ஞானவாபி மசூதியை ஆய்வு செய்து வீடியோ பதிவு எடுக்க உத்தரவிட்டது.

வாரணாசி நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அஞ்சுமன் இந்தஜாமியா மஸ்ஜித் மேல்முறையீடு செய்தது. ஆனால் இம்மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனைத் தொடர்ந்து அஞ்சுமன் இந்தஜாமியா மஸ்ஜித் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இந்த வழக்கை உச்சநீதிமன்றம், வாரணாசி நீதிமன்றத்துக்கே அனுப்பியது. அதாவது இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பதை முடிவு செய்ய வாரணாசி நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனடிப்படையில் விசாரணை நடத்திய வாரணாசி நீதிமன்றம், அஞ்சுமன் இந்தஜாமியா மஸ்ஜித் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் ஞானவாபி மசூதி வளாகத்தின் சிருங்கார் கவுரி அம்மனை வழிபட அனுமதி கோரி 5 இந்து பெண்கள் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதாகவும் அறிவித்தது.
அத்துடன் ஞானவாபி மசூதி வளாகத்தில் 1993-ம் ஆண்டு வரை இந்து தெய்வங்களை வழிபாடு செய்ததற்கான ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும் என்றும் வாரணாசி நீதிமன்ற நீதிபதி ஏகே விஷ்வேஷ் உத்தரவிட்டிருக்கிறார்.இது தொடர்பாக இந்து பெண்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் ஹரி சங்கர் ஜெயின் உள்ளிட்டோர், ஞானவாபி மசூதியின் பல இடங்களில் 1993-ம் ஆண்டு வரை இந்து தெய்வங்களை வழிபாடு செய்துள்ளனர். இது தொடர்பான ஆணங்களை நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்வோம் என்றனர்.
காசி விஸநாதர் ஆலயத்தின் அருகே இந்து ஆலயம் இருந்தது; அதனைத்தான் மன்னர்கள் இடித்துவிட்டு ஞானவாபி மசூதியாக கட்டி இருக்கின்றனர் என்பது பொதுவான குற்றச்சாட்டு. இதேபோல் அயோத்தி பாபர் மசூதி, ராமர் பிறந்த இடம் என கூறி அது சட்டவிரோதமாக இடிக்கப்பட்டு நாட்டில் ரத்த ஆறு ஓடியது குறிப்பிடத்தக்கது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications