உ.பி.: பாஜகவில் இருந்து விலகிய மாஜி அமைச்சர் ஸ்வாமி பிரசாத் மவுரியாவுக்கு பிடிவாரண்ட்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ஸ்வாமி பிரசாத் மவுரியாவுக்கு 7 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு ஒன்றில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10-ந் தேதி தொடங்கி மார்ச் 7-ந் தேதி வரை தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் கருத்து கணிப்புகள் அனைத்தும் பாஜகவே ஆட்சியைத் தக்க வைக்கும் என்கின்றன. அதேநேரத்தில் 2017 தேர்தலைப் போல 312 இடங்களை பாஜக பெறாது; குறைந்தது 100 தொகுதிகளை பாஜக இழக்கும் என்றும் கருத்து கணிப்புகள் கூறுகின்றன. அத்துடன் சமாஜ்வாதி கட்சி, களத்தில் பாஜகவுக்கு கடும் போட்டியைத் தரும் என்றும் அவை சுட்டிக்காட்டி இருக்கின்றன.
இந்நிலையில் உ.பி. தேர்தல் களத்தில் புதிய திருப்பமாக ஆளும் பாஜக அமைச்சர்கள் 2 பேர் உட்பட மொத்தம் 6 எம்.எல்.ஏக்கள் கடந்த 24 மணிநேரத்தில் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அதேவேகத்தில் அகிலேஷ் யாதவை நேரில் சந்தித்து சமாஜ்வாதி கட்சிகளிலும் இணைத்து கொண்டுள்ளனர். மேலும் பல எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இருந்து விலகி அகிலேஷ் யாதவ் கட்சியில் இணைவார்கள் என கூறப்படுகிறது. அமைச்சர் பதவியில் இருந்து ஸ்வாமி பிரசாத் மவுரியாதான் முதன் முதலாக விலகினார். அதையடுத்தே அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்தனர்.
இந்த பரபரப்புகளுக்குள் தற்போது 7 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு ஒன்றில் ஸ்வாமி பிரசாத் மவுரியாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2014-ல் பொதுக்கூட்டடத்தில் வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஸ்வாமி பிரசாத் மவுரியா ஆஜராகாத நிலையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஜனவரி 24-ல் நடைபெற உள்ளது.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications