உ.பி. கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது ஏன்? அதிகாலை முதல் நடந்தது என்ன?
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலியானதற்கு என்ன காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினம் நடந்தது என்ன என்பதை பார்க்கலாம்.
உத்தரப்பிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த கும்பமேளா நிகழ்ச்சி ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது. இது பிப்ரவரி 26ஆம் தேதி வரையிலான 45 நாட்களுக்கு நடைபெறும்.

இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி செய்யப்பட்டுள்ளது. 1800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
இந்த மகா கும்பமேளாவில் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திரிவேணி சங்கமத்தில் புனித நீராட இதுவரை 15 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மட்டும் 4.8 கோடி மக்கள் புனித நீராடினர். இது கடந்த பொங்கல் அன்று 3.5 கோடி பேர் நீராடியதை விட அதிகமாகும்.
இந்த நிலையில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக கும்பமேளா நடைபெறும் இடத்திற்கு வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அதிலும் தை அமாவாசை நாளன்று திரிவேணி சங்கமத்தில் நீராட கோடிக்கணக்கானோர் வருகை தருவர் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் தை அமாவாசை தினத்தன்று, 10 கோடிக்கும் மேற்பட்டோர் வருகை தருவர் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் பாதுகாப்பு, கூட்டத்தை கையாளும் வகையிலான வசதிகள் அந்த பகுதியில் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இன்று தை அமாவாசையையொட்டி அதிகாலை முதலே புனித நீராட ஏராளமானோர் திரண்டனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பலர் கீழே தவறி விழுந்தனர். இதனால் 10 க்கும் மேற்பட்டோர் பலியானதாக சொல்லப்படுகிறது. ஏராளமானோர் காயமடைந்தனர்.
இந்த கூட்ட நெரிசலால் மேலும் மேலும் கும்பமேளாவுக்கு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். எப்படியோ முட்டி மோதி கும்பமேளா நடைபெறும் இடத்திற்கு வந்தவர்கள் குளிக்க முடியாமல் திரும்பி விட்டனர். மேலும் கூட்டம் அதிகமாக இருப்பதால் நீராடியவர்கள் வெளியே வந்து மற்றவர்களுக்கு வழி விடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனாலும் பக்தர்கள் நெரிசலில் சிக்கினர்.
இதையடுத்து காயமடைந்தவர்கள் அங்கிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். இந்த கும்பமேளாவில் சிக்கியவர்களை மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications