Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உ.பி. கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது ஏன்? அதிகாலை முதல் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலியானதற்கு என்ன காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினம் நடந்தது என்ன என்பதை பார்க்கலாம்.

உத்தரப்பிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த கும்பமேளா நிகழ்ச்சி ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது. இது பிப்ரவரி 26ஆம் தேதி வரையிலான 45 நாட்களுக்கு நடைபெறும்.

kumbh mela 2025 uttar pradesh 2025

இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி செய்யப்பட்டுள்ளது. 1800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

இந்த மகா கும்பமேளாவில் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திரிவேணி சங்கமத்தில் புனித நீராட இதுவரை 15 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மட்டும் 4.8 கோடி மக்கள் புனித நீராடினர். இது கடந்த பொங்கல் அன்று 3.5 கோடி பேர் நீராடியதை விட அதிகமாகும்.

இந்த நிலையில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக கும்பமேளா நடைபெறும் இடத்திற்கு வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அதிலும் தை அமாவாசை நாளன்று திரிவேணி சங்கமத்தில் நீராட கோடிக்கணக்கானோர் வருகை தருவர் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய தினம் தை அமாவாசை தினத்தன்று, 10 கோடிக்கும் மேற்பட்டோர் வருகை தருவர் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் பாதுகாப்பு, கூட்டத்தை கையாளும் வகையிலான வசதிகள் அந்த பகுதியில் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இன்று தை அமாவாசையையொட்டி அதிகாலை முதலே புனித நீராட ஏராளமானோர் திரண்டனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பலர் கீழே தவறி விழுந்தனர். இதனால் 10 க்கும் மேற்பட்டோர் பலியானதாக சொல்லப்படுகிறது. ஏராளமானோர் காயமடைந்தனர்.

இந்த கூட்ட நெரிசலால் மேலும் மேலும் கும்பமேளாவுக்கு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். எப்படியோ முட்டி மோதி கும்பமேளா நடைபெறும் இடத்திற்கு வந்தவர்கள் குளிக்க முடியாமல் திரும்பி விட்டனர். மேலும் கூட்டம் அதிகமாக இருப்பதால் நீராடியவர்கள் வெளியே வந்து மற்றவர்களுக்கு வழி விடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனாலும் பக்தர்கள் நெரிசலில் சிக்கினர்.

இதையடுத்து காயமடைந்தவர்கள் அங்கிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். இந்த கும்பமேளாவில் சிக்கியவர்களை மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+