ஒரு கோடி வேலை வாய்ப்பு.. அசத்தி காட்டிய உத்தரப் பிரதேசம்! முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருப்பதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

நேற்று முதலமைச்சர் இல்லத்தில் கொடியை ஏற்றிய பின்னர் பேசிய அவர், "உத்தரப்பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களும் இன்று இந்த வடிவத்தில் செழித்து வருகின்றன. இன்று நாம் அனைவரும் புதிய இந்தியாவைப் பார்க்கிறோம். பூமியை ஒரு துண்டு நிலமாக நாங்கள் ஒருபோதும் கருதவில்லை. அதை பூமி தாயாக பார்க்கிறோம். பல்லாயிரம் ஆண்டு பழமையான பாரம்பரியத்தில் நாம் பெருமை கொள்கிறோம். வெவ்வேறு உடை, உணவுப் பழக்கம் இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்றுதான்.

Yogi Adityanath has said that jobs have been created for one crore people in UP

தமிழ்நாட்டில் பிறந்த ஒருவர் வடக்கு எல்லையை பாதுகாக்கும் பணியில் உயிரிழக்கிறார். இந்த தியாகம்தான் நாம் ஒன்றுபட்டிருக்கிறோம் என்பதை இன்னும் உறுதியாக கூறுகிறது. எனவே இந்திய பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு. கடந்த 6 ஆண்டுகளில் உத்தரபிரதேசம் பெரிய அளவில் முன்னேறியுள்ளது. இன்று ஜி20யில் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்பது இந்தியர்களாகிய நமக்குப் பெருமை. உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில், இங்கு வலுவான சட்டம் ஒழுங்கு உள்ளது .

உ.பி.யில் ரூ.36 லட்சம் கோடி முதலீட்டு திட்டங்கள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும், வாழ்வாதாரமும் கிடைக்கும். நம்முடைய மாநிலத்தில் சுற்றுலாவுக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் மக்களை ஈர்த்திருக்கிறது. இன்று நாம் உள்கட்டமைப்பில் சிறந்த மாநிலமாக திகழ்கிறோம். நமது அரசு அயோத்தி மற்றும் ஜீவாரில் விமான நிலையங்களை கட்டி வருகிறது. குடிநீர் இணைப்புக்கான பணியும் நடந்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+