மாநிலத்தின் சிறைச்சாலைகளை மாற்ற புதிய திட்டம்! உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உள்ள சிறைச்சாலைகளின் தரத்தை மாற்ற வேண்டும் என்றும், சிறைகள் சீர்திருத்தும் இல்லங்களாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
மாநிலத்திற்கான புதிய சிறைச்சாலைச் சட்டத்தைத் தயாரிப்பது தொடர்பான வழிமுறைகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று வெளியிட்டிருந்தார். பின்னர் இது குறித்து பேசிய அவர், "சிறைச்சாலைகளை 'சீர்திருத்த இல்லங்களாக' அமைக்க வேண்டும். இந்த நோக்கத்திற்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். சிறைச்சாலையில் உள்ள குறைகளை மதிப்பீடு செய்து அதை நிவர்த்தி செய்ய வேண்டும். இதற்காக சிறைத்துறை வாரியம் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பெண் கைதிகள் மற்றும் திருநங்கைகளுக்கு தனித்தனியாக தங்குமிடம் வழங்கப்பட வேண்டும். அந்த வகையில், மாநிலத்தில் திறந்தவெளி சிறைச்சாலைக்கான முறையான திட்டத்தை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளை சிறந்த புனர்வாழ்வு மையங்களாக நிறுவ திடமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பழக்கமான குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகள் உட்பட நாட்டிற்கும் சமூகத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கும் கைதிகளுக்கு உயர் பாதுகாப்பு முகாம்கள் தயார் செய்யப்பட வேண்டும்.
சிறைகளில் மொபைல் போன்கள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதற்கு கடுமையான தண்டனை வழங்குவதை அமல்படுத்த வேண்டும். தற்போது சிறைச்சாலைகளை பொறுத்த அளவில் 1894-ம் ஆண்டு சிறைச்சாலை சட்டம் மற்றும் 1900-ம் ஆண்டு கைதிகள் சட்டம் ஆகியவைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே இதில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டி இருக்கிறது. சிறைகள் தண்டிக்கப்பட வேண்டிய இடங்கள் கிடையாது. அவை, மாற்றத்திற்கான இடம்.
அந்த மாற்றத்தை நாம்தான் ஏற்படுத்த வேண்டும். எனவேதான் மாதிரி சிறைச்சாலை சட்டம் 2023 மத்திய அரசால் தயாரிக்கப்பட்டது. மாநிலத்தை பொறுத்த அளவில் திறந்தவெளி சிறைச்சாலைக்கான முறையான திட்டத்தை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவை இரண்டும் சிறை கைதிகளின் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும்" என்று கூறியுள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications