தொட்டிக்குள் இறங்கியவர்கள் அடுத்தடுத்து பலி.. மதுரையில் விஷ வாயு தாக்கி 3 பேர் மரணம்.. வழக்குப்பதிவு
மதுரை: மதுரையில் விஷவாயு தாக்கி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் பலியானது தொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
மதுரையில் நேற்று பழங்காநத்தம் பகுதியில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி ஆனார்கள். நேற்று இரவு நேதாஜி நகரில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது இந்த சம்பவம் நடைபெற்றது.

என்ன நடந்தது?
சிவக்குமார் என்ற மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்துள்ளார். அப்போது அவர் மயங்கி விழுந்த நிலையில் அவரை காப்பாற்ற அடுத்தடுத்து லட்சுமணன், சரவணன் என்ற இரண்டு ஊழியர்கள் உள்ளே இறங்கி உள்ளனர். உள்ளே மயங்கி விழுந்த சிவக்குமாரை முதலில் சத்தமாக கத்தி எழுப்ப முயன்று உள்ளனர். பல முறை கத்தியும் சிவக்குமார் எழுந்திருக்கவில்லை.

தூக்க முடிவு
அவரிடம் கயிறை தூக்கி வீசி எப்படியாவது தூக்கலாம் என்று முயன்று உள்ளனர். ஆனால் இரவு நேரம் என்பதால் சரியாக கண் தெரியவில்லை. லட்சுமணன், சரவணன் என்ற இரண்டு ஊழியர்கள் உள்ளே இறங்கி உள்ளனர். உள்ளே சென்று அவரை கயிறை கட்டி தூக்க முயன்று உள்ளனர். ஆனால் கயிரை கட்டிக்கொண்டு இருக்கும் போதே இரண்டு பேரும் அங்கேயே மயங்கி சிவக்குமார் மீது விழுந்துள்ளனர்.

பலி
உள்ளேயே விஷ வாயு தாக்கி அவர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி ஒப்பந்த நிறுவனம் மீது இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது. தனியார் நிறுவன உரிமையாளர் விஜயானந்த், ரமேஷ், லோகநாதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கு
இரவு நேரத்தில் கழிவு நீரை சுத்தம் செய்ய அனுப்பியது, இரவு நேரத்தில் தொட்டிக்குள் இறக்கியது, ஊழியர்களுக்கு மாஸ்க் கொடுக்காமல் இருந்தது, போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் இருந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வாரம் சென்னையை அடுத்த ஆவடியில் இதேபோல் விஷவாயு தாக்கி ஊழியர்கள் பலியானார்கள். குடிநீர் தொட்டியைச் சுத்தம் செய்த வீட்டின் உரிமையாளர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications