கொள்ளையர்களை ஒடுக்க.. மதுரைக்கு புதிதாக 4 போலீஸ் ஸ்டேஷன்.. ஆணையர் டேவிட்சன் தகவல்!
Recommended Video
மதுரை: கொலை கொள்ளை ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் மதுரை மாநகரில் புதிதாக நான்கு காவல் நிலையங்கள் வரவுள்ளதாக மதுரை மாநகர காவல்துறை ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகரம் உருவாக்கப்பட்டபோது அப்போதைய சூழ்நிலையில் மக்கள் தொகை அடிப்படையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆனால் இன்று மதுரை பல மடங்கு பெருகி விரிந்து பெருநகரமாக மாறி நிற்கிறது. ஆனாலும் போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இருந்தபோதிலும் குற்றங்களை தடுக்க கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக மாநகரில் உள்ள சில காவல் நிலையங்களில் இருந்து போலீசார் விரிவாக்கப் பணிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காவலர்கள் தேவை
ஆனாலும் போதுமானதாக இல்லை. இந்த நிலையில், மதுரை மாநகரில் குற்றம் கொள்ளை குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கூடுதலாக நான்கு காவல்நிலையங்கள் வரவுள்ளது.

2 ஆக பிரிக்கப்படும் அண்ணா நகர்
இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் கூறுகையில், அண்ணாநகர் காவல் நிலையத்தை இரண்டாகப் பிரித்து திருப்பாலை மற்றும் மாட்டுத்தாவணியில் இரண்டு காவல் நிலையங்கள் வர உள்ளன.

கோச்சடை - அனுப்பானடி
இதேபோல் அவனியாபுரம், எஸ்எஸ் காலனியை பிரித்து அனுப்பானடி, கோச்சடையில் புதியதாக 2 காவல் நிலையங்கள் அமைய உள்ளன. இதற்கான பரிந்துரையை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதன் மூலம் மதுரை மாநகருக்கு கூடுதல் போலீசார் கிடைக்க வாய்ப்புள்ளது.

மக்கள் சுதாரிப்பாக இருக்க வேண்டும்
குற்ற சம்பவங்களை தடுக்கும் விஷயத்தில் பொதுமக்களுக்கும் பொறுப்பு உண்டு. உங்களின் கண் முன்பு ஒரு அசம்பாவிதம் நடக்கும் போது நமக்கு என்ன என்று பாராமுகமாக செல்வதை விடுத்து நீங்களும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால் நிச்சயம் குற்றமில்லா மதுரையை உருவாக்க முடியும்.

போக்குவரத்து விதி மீறல்
மதுரை மாநகரில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை சரியாக பின்பற்றுவதில்லை. நடப்பாண்டில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 3 லட்சத்து 91 ஆயிரத்து 202 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் அவர்களிடமிருந்து 7 கோடியே 69 லட்சத்து 27 ஆயிரத்து 115 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தகவல் தெரிவித்துள்ளார்.
-
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications