மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரையில் பரபரப்பு.. தனியார் வாகனத்தில் 47 கிலோ தங்க நகைகள்.. இதுவரை ரூ. 25 கோடி சிக்கியது

Google Oneindia Tamil News

Recommended Video

    தனியார் வாகனத்தில் 47 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ. 25 கோடி பறிமுதல்-வீடியோ

    மதுரை: மதுரையில் தனியார் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 47 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

    மதுரையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மதுரை மாநகர் மற்றும் புறநகர் முழுவதும் மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில் 70 பேர் கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் குழு மற்றும் நிலையான கண்காணிப்பு குழு வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    47kg gold jewels seized in madurai

    இந்த நிலையில் இன்று அதிகாலை மதுரை ஐயர் பங்களா பகுதியில் தேர்தல் பறக்கும் அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் தேர்தல் படையினர் சோதனையில் ஈடுபட்ட போது மதுரையில் இருந்து சேலம் செல்வதற்காக சென்று கொண்டிருந்த கர்நாடக பதிவு உள்ள வாகனத்தை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

    அப்போது முறையான ஆவணங்கள் இன்றி 47 கிலோ தங்கம் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இந்த நிலையில் வாகனத்தின் ஓட்டுனரிடம் விசாரித்தபோது இது தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் என்று கூறுகையில் 47 கிலோ தங்கம் வைத்திருந்த வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டு வந்து நிறுத்தி வைத்தனர்.

    மேலும் மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜன் இன்னும் சற்று நேரத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வந்த வாகனத்தை ஆய்வு செய்ய உள்ளார். இதுவரை சுமார் 25 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    EC flying squad has seized 47kg gold jewels in madurai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X