மதுரையில் “பிரம்மாண்டம்”- 7.5 கிமீ.. ரூ.612 கோடி! தமிழ்நாட்டின் நீளமான மேம்பாலம் விரைவில் திறப்பு
மதுரை - நத்தம் இடையிலான தமிழ்நாட்டிலேயே மிக நீளமான மேம்பாலம் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை: மதுரை - நத்தம் இடையில் அமைக்கப்பட்டு இருக்கும் தமிழ்நாட்டிலேயே மிக நீளமான மேம்பாலம் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மேம்பாலம் திறக்கப்பட்டால் மதுரை - திண்டுக்கல் இடையிலான பயண நேரம் பெருமளவில் குறையும் என்று நம்பப்படுகிறது.
பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும், முக்கிய நகரங்களிலும் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் மதுரை தல்லாக்குளம் ஐ.ஓ.சி அலுவலகத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வரையிலான 35 கி.மீ தூர சாலை ரூ.1,028 கோடி மதிப்பில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.

ரூ.612 கோடி மதிப்பு
இதற்கான பணிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. அதில் ஒரு பகுதியாக மதுரை தல்லகுளத்தில் இருந்து ஊமச்சி குளத்தில் உள்ள மாரணிவிலக்கு வரை 7.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.612 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் நடைபெற்று வந்தன.

268 ராட்சத தூண்கள்
நவீன முறையில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்ட இந்த பறக்கும் மேம்பாலத்துக்கு வலுவான அஸ்திவாரம் அமைக்கப்பட்டு, 150 அடிக்கு ஒரு தூண் என்ற அடிப்படையில் மேம்பாலத்தை தாங்கிப் பிடிக்கும் வகையில் 268 ராட்சத தூண்கள் கட்டப்பட்டன. அதை தொடர்ந்து தூண்களுக்கு இடையே பாலத்தை இணைக்கும் வகையில் கிடைமட்ட வாக்கில் கான்கிரீட் கார்டர்கள் தயாரிக்கும் பணி நடைபெற்றது.

கட்டுமானப் பணி
இதற்கென தனியாக பணிமனை அமைக்கப்பட்டு துரிதமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடர்ச்சியாக அந்த கான்கிரீட் கார்டர்கள் கிரேன் மூலம் தூக்கில் மேலே நிலைநிறுத்தப்பட்டன. அவை ஒவ்வொன்றையும் கான்கிரீட் மற்றும் இரும்பு மோல்டுகளை கொண்டு இணைத்தனர்.

பூங்காக்கள், சிலைகள்
சாலை, சாலை தடுப்பு பணிகளும் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. பாலத்திற்கு கீழ் ஒவ்வொரு தூணுக்கும் இடையே எல்.இ.டி விளக்குகள் மற்றும் தூணை சுற்றி 4 திசைகளிலும் சிறிய எல்.இ.டி விளக்குகள் பொறுத்தப்படுகின்றன. ஊமச்சிகுளம், திருப்பாலை, அய்யர் பங்களா பகுதிகளில் நடைபயிற்சி மேடை, பூங்காக்கள், விவசாயி சிலை, சிறுவர்களை கவரும் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.

மதுரை - திருச்சி பயண தூரம்
மதுரை - நத்தம் 4 வழிச்சாலையை தொடர்ந்து திருச்சி - துவரங்குறிச்சி இடையே 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இவை பயன்பாட்டுக்கு வந்த பிறகு இந்த மேம்பாலம் வழியே சென்றால் திருச்சி - மதுரை இடையிலான பயண தூரம் 24 கி.மீ குறையும். இதன் மூலம் மதுரையிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்வோருக்கான பயண தூரமும் குறையும்.

மதுரை - திண்டுக்கல் பயணம்
அதேபோல் திருச்சியுடன் திண்டுக்கல் சாலையை இணைக்கும் வகையில் சிட்டம்பட்டி - வாடிப்பட்டி இடையே 4 வழிச்சாலையும் அமைக்கப்படுகிறது. இதுவும் பயன்பாட்டுக்கு வந்தால், இதனை மதுரை மக்கள் போக்குவரத்துக்காக அதிகளவில் பயன்படுத்துவார்கள். இதன் மூலம் திண்டுக்கல் மதுரையில் இடையேயான பயண தூரமும் குறையும் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் மிக நீள மேம்பாலம்
7.5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த மேம்பாலம்தான் தமிழ்நாட்டிலேயே மிக நீளமான வாகன போக்குவரத்துக்கு பயன்படும் மேம்பாலம் என்ற பெருமையை பெற்று உள்ளது. பாலத்தின் பணிகள் பெருமளவில் முடிந்துவிட்டதை தொடர்ந்து இம்மாதத்தின் இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்திலோ இது மக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications