ஆரம்பிச்சாச்சு.. தேர்தல் முடிந்த கையோடு அதிமுகவிற்கு முதல் அதிர்ச்சி.. திமுக கையில் விழுந்த லட்டு!
மதுரை: தமிழகத்தில் நகர்ப்புற தேர்தல் முடிவு வந்ததும் அதிமுகவிற்கு திமுகவால் விழுந்த முதல் ஷாக் ஒன்று நடந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்தது.
இந்த தேர்தலில் தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்றில் உள்ள 12,838 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதன் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.

திமுக கூட்டணி
இந்த தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வென்றது. இந்த நிலையில் மதுரை மேலூர் நகராட்சி 9ஆவது வார்டில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் அருண் சுந்தர் திமுகவில் இணைந்தார். பதிவுத் துறை அமைச்சர் பி மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்துவிட்டார்.

14 ஆவது வார்டு
அது போல் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் 14 ஆவது வார்டில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் திமுகவில் இணைந்தார். இவர் பால்வளத் துறை அமைச்சர் நாசர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மதுரை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

ஹிஜாப் படுதோல்வி
ஹிஜாப் சர்ச்சை வெடித்த மேலூர் நகராட்சி 8வது வார்டில் பாஜக படுதோல்வி அடைந்தது. அங்கு அக்கட்சி வெறும் 10 ஓட்டுகளை மட்டுமே வென்றது. மேலூர் நகராட்சி 8வது வார்டில் திமுக வேட்பாளர் முகமது யாசின் 651 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

திமுக கூட்டணி கட்சி
பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்களது வெற்றியை பதிவு செய்து வரும் நிலையில், மதுரை மேலூர் நகராட்சி 9-வது வார்டில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் அருண் சுந்தர பிரபு வெற்றிக்குப் பின்பு திமுகவில் இணைந்துள்ளார்.

ஆவடி அதிமுக வேட்பாளர்
இதேபோல ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் டாக்டர் ராஜேஷ் என்பவர் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற கையோடு டாக்டர் ராஜேஷ் திமுகவிலும் இணைந்துள்ளார். ராஜேஷின் காரில் பொருத்தப்பட்டு இருந்த அதிமுக கொடியை அகற்றி விட்டு திமுக கொடி பொருத்தப்பட்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பல இடங்களில் அதிமுக தோல்வியடைந்த நிலையில், வெற்றி பெற்ற ஒருசில இடங்களிலும் அதிமுகவினர் திமுகவுக்கு தாவி வருவது அக்கட்சி தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!












Click it and Unblock the Notifications