குலதெய்வம் சத்தியமாக.. அஜித் குமாரை விசாரிக்க டெல்லி அதிகாரியிடம் பேசினேனா? நிகிதா விளக்கம்!
மதுரை: அஜித் குமார் விவகாரத்தில் குலதெய்வம் சத்தியமாக எந்த உயரதிகாரிகளிடமும் உதவி கோரவில்லை என்று நகை திருடுபோனதாக புகார் அளித்துள்ள நிகிதா தெரிவித்துள்ளார். நகையை காணவில்லை என்ற புகாரில் எந்த பொய்யையும் கூறவில்லை என்று கூறிய நிகிதா, டெல்லியிலோ அல்லது தலைமைச் செயலகத்திலோ எந்த உயர் அதிகாரியையும் எனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
காவல்துறையின் சித்ரவதையால் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித் குமார் உயிரிழந்தார். மடப்புரம் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த நிகிதா மற்றும் சிவகாமி ஆகியோர் தங்களின் 9 சவரன் நகையை காணவில்லை என்று அளித்த புகார் காரணமாக, அஜித் குமார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதன்பின் அஜித் குமார் கொல்லப்பட்ட நிலையில், நிகிதா மீது பல்வேறு பண மோசடி புகார் எழுந்தது.

நிகிதா விளக்கம்
ஒரு கட்டத்தில் நிகிதா கோவையில் தலைமறைவாகியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நிகிதா பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் நிகிதா பேசுகையில், காவல்துறையில் எந்த உயர் அதிகாரியையும் எனக்கு தெரியாது. அவ்வளவு சக்தி வாய்ந்த நபராக இருந்திருந்தால், காவல் நிலையத்தில் மதியம் 2.30 மணி முதல் 8 மணி வரை கொசுக்கடியில் அமர்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
குலதெய்வம் சத்தியமாக..
டெல்லி அதிகாரி, தலைமைச் செயலக அதிகாரி என்று யாரையும் எனக்கு தெரியாது. சோசியல் மீடியாவில் நானும் பார்த்து கொண்டே இருக்கிறேன். நகை திருடுபோன சம்பவம் தொடர்பாக யாரிடமும் பேசவில்லை. எந்த அதிகாரிக்கும் தொலைபேசி மூலமாக அழைத்து உதவி கேட்கவில்லை. ஏனென்றால் எந்த அதிகாரியையும் எனக்கு தெரியாது. புகார் கொடுத்த பின், சனிக்கிழமையன்று சில விஷயங்களை சொன்னார்கள்.
சந்தேகம் வந்தது ஏன்?
அஜித் குமார் ஏதாவது சொன்னாரா என்று கூட எந்த தகவலும் கூறவில்லை. புகாரில் நான் எந்த பொய்யையும் கூறவில்லை. அஜித் குமாரிடம் மட்டும்தான் கார் கொடுத்துள்ளேன். அதனால் சந்தேகம் வந்தது. தனிப்படை காவலர்களுக்கும், காவலர்களுக்கும் இடையிலான வித்தியாசம் கூட தெரியாது. அஜித் குமார் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தவறான விஷயம்.
மன்னிப்பு கேட்ட நிகிதா
அவரின் தாய் எவ்வளவு பாடுபட்டிருப்பார். அஜித் குமாரிடம் மன்னிப்பு கோருகிறேன். அவரின் தாயாரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். அஜித் குமாருடன் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் எடுத்திருப்பார் என்பது சந்தேகம் தான். அவரை துன்புறுத்துங்கள், அழுத்தம் கொடுங்கள் என்று குலதெய்வம் சத்தியமாக செய்யவில்லை. இப்படியொரு விஷயம் நடக்கும் என்பது தெரியாது.
நகை என்னுடையது அல்ல
நான் இருக்கும் போது அஜித் குமாரிடம் விசாரணை நடத்தினார்கள். அஜித் குமார் உயிரிழந்தது குறித்து எங்களுக்கும் எதுவும் சொல்லவே இல்லை. ஞாயிற்றுக்கிழமையன்று திடீரென போலீசார் வந்து, டிஎஸ்பி அழைக்கிறார் என்று கூறினார்கள். பின் என்னிடம் விசாரிக்க விரும்புவதாக கூறினார்கள். புகார் கொடுக்கும் போது சொன்னது இதுதான். நகை அம்மா உடையது.
என் அம்மா அழுதுவிட்டார்
இதன்பின் எங்களை காவல் நிலையம் அழைத்து சென்றார்கள். அங்கு போன பின் நீதிபதி புறப்பட்டு சென்றுவிட்டார்கள் என்றனர். தொடர்ந்து மாஜிஸ்திரேட்டை சந்தித்து விசாரணையில் அனைத்தையும் கூறினோம். அதுவரை நகை பற்றி எதுவும் சொல்லவில்லை. தொடர்ந்து, அஜித் குமார் உயிரிழந்துவிட்டார் என்று அதிர்ச்சி கொடுத்தனர். அதனை கேட்டு என் அம்மா மகனே என்று அழுக தொடங்கிவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு












Click it and Unblock the Notifications