மதுரையின் கம்பீரம்.. முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வர்றது யார் தெரியுமா? கீழக்கரை மாஸ்
மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.. இந்த மைதானத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்திருக்கிறார்.
இதற்காக அவர் இன்று காலை மதுரை வந்தார்.. காலை 10.30 மணிக்கு ஜல்லிக்கட்டு மைதானம் திறந்து வைத்துள்ளார்.. திறப்பு விழா நிகழ்ச்சிகள் முடிந்ததும், புதிய அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற துவங்கி உள்ளன.

"கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த அரங்கத்தை, முதல்வர் திறந்து வைத்ததுமே, ஜல்லிக்கட்டு போட்டிகள் புதிய மைதானத்தில் நடைபெற போகின்றன..
ஸ்டேடியம்: இதுவரை கேலரிகளில் பொதுமக்கள் தொங்கிக்கொண்டும், பாதுகாப்பு இல்லாமலும், எப்போது கீழே விழுவோ என்றுகூட தெரியாமலும், பதற்றத்துடனேயே விளையாட்டு போட்டியை கண்டுகளித்த நிலையில், இப்போது நிலைமை தலைகீழாகி உள்ளது..
இந்தநிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை காண மதுரை மாவட்டத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என்று மதுரை மாவட்ட கலெக்டரிடம் நேரில் மனு அளித்தனர்.
பூரிப்பு: அவர்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.. இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் வகையில் மதுரை மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மதுரையில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு போட்டிகளை முதல் முறையாக பார்க்க போகிறோம் என்று பூரிப்புடனும் மகிழ்ச்சியுடனும் சொல்கிறார்கள் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள்,












Click it and Unblock the Notifications