அதிமுக பேனர்களைக் கிழித்தெறிந்த அமமுக.. உசிலம்பட்டியில் பதட்டம்
Recommended Video
உசிலம்பட்டியில் அதிமுக பேனர்களைக் கிழித்தெறிந்த அமமுக..வீடியோ
உசிலம்பட்டி: மறைந்த பி.கே.மூக்கையாத்தேவர் 97வது பிறந்த தினத்தையொட்டி அதிமுகவினர் வைத்திருந்த பேனர்களை அமமுக கட்சியினர் கிழித்தெறிந்ததால் உசிலம்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
மறைந்த முன்னாள் பார்வட் ப்ளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளரும் மூன்றுமுறை உசிலம்பட்டியின் சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த பி.கே.மூக்கையாத்தேவரின் 97வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் அமமுக சார்பில் தேனி பாராளுமன்ற வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் தலைமையில் அமமுக கட்சியினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
அதேசமயம், அந்தப் பகுதியில் அதிமுகவினரும் பேனர் வைத்திருந்தனர். இதைப் பார்த்த அமமுகவினர் ஆத்திரமடைந்து பேனர்களைக் கிழித்தெறிந்தனர். அத்தோடு நில்லாமல் அவற்றை தீவைத்தும் எரித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு அமமுகவினரை தடுத்தனர்.
தேனி அதிமுக வேட்பாளராக போட்டியிடுபவர் துணை முதல்வர் ஓ.பன்னீல்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் ஆவர். அவரது பெயர் அடங்கிய பேனர்கள் கிழித்தெறியப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மோதல் வெடித்து விடாமல் தடுக்க போலீஸார் குவிக்கப்பட்டனர்.
மு.க. ஸ்டாலின் முன்மொழிந்தால்.. ராகுல் பிரதமர் ஆகிவிடுவாரா?.. ஈ.பி.எஸ் பேச்சு
Comments
English summary
A group of AMMK cadres tore ADMK banners in Usilampatti today.