அரசால் எல்லாமே செய்ய முடியாது.. பெண் பிள்ளைகளை பெற்றோர் தான் பாதுகாக்கணும் - மதுரை ஆதீனம்
மதுரை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மதுரை ஆதீனம்,‛‛பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் பெற்றோர்கள்தான் பெண் பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். எல்லாமே அரசால் செய்ய முடியாது. ஒவ்வொரு பெண்ணிற்கும் தனித்தனியே காவலர்கள் போடமுடியாது'' என்று கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்து மாணவியை மிரட்டி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் மொத்த தமிழகத்தையும் அதிர வைத்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே தான் ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர். திமுகவை சேர்ந்த அமைச்சருடன் நெருக்கமாக இருப்பதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
தற்போது இந்த விவகாரம் ஆளும் அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து பல இடங்களில் தடையை மீறி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் மதுரை ஆதீனம் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இந்த விவகாரம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, மதுரை ஆதீனம், ‛‛பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் பெற்றோர்கள்தான் பெண் பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். எல்லாமே அரசால் செய்ய முடியாது. ஒவ்வொரு பெண்ணிற்கும் தனித்தனியே காவலர்கள் போடமுடியாது. அப்படிச் செய்தால் போலீஸுக்கு அந்த வேலையை பார்ப்பதற்குத்தான் நேரம் சரியாக இருக்கும்.
பெற்றோர்கள், ஆசிரியர்கள் பிள்ளைகளை கட்டுப்பாடாக வளர்க்க வேண்டும். என்னை என் வீட்டில் கட்டுப்பாட்டோடு வளர்த்துள்ளார்கள்" என கூறியுள்ளார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications