மதுரை மீனாட்சி அம்மனுக்கு சேதமடைந்த நகைகளை அணிவிப்பதா? இந்துசமய அறநிலையத்துறைக்கு பாஜக கேள்வி!
மதுரை: மதுரை மீனாட்சி அம்மனுக்கு சேதமடைந்த நகைகளை அணிவிப்பதா என இந்துசமய அறநிலையத்துறைக்கு பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
மீனாட்சி அம்மனுக்கு அணியப்பட்டுள்ள நகைகளில் பவளங்களையும், முத்துக்களையும் படத்தில் காணாதது பக்கதர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக பகீர் கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் டாக்டர்.சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கொரோனா பரவல்
கொரோனா பரவல் காரணத்திற்காக 2 வருடமாக கோவில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்பட்ட மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று முன் தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் 12ஆம் தேதியும் 14ஆம் தேதி திருக்கல்யாணமும், 15ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது.

சேதமடைந்த நகைகள்
நகைகளில் பவளங்களையும், முத்துக்களையும் படத்தில் காணாதது பக்கதர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மனுக்கு அணியப்பட்டுள்ள நகைகள் சேதமடைந்துள்ளதை கோவில் நிர்வாகமும், இந்து அறநிலையத்துறையும் கவனிக்கவில்லையா என்ற சந்தேகம் எழுகிறது.

அதிக கட்டணம் வசூல்
மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரூ.200 முதல் ரூ.500 வரை வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல விதிக்கப்படுள்ள தடையை மறுபரிசீலனை செய்து, தேவைப்பட்டால் செல்போன் கேமராவை மறைக்கும் ஸ்டிக்கர்களை பொதுமக்களுக்கு வழங்கலாம். பிற மாநில பக்தர்களும், வெளிநாட்டினரும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவது குறைந்துள்ளது.

திராவிட மாடலா?
காரணம் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை உள்ளதால், ஒருவேளை அவர்களின் குடும்பத்தினரை கோவில் வளாகத்தில் பிரிந்துவிட்டால் தொடர்பு கொள்ள முடியாது என்ற பயத்தினால் கோவில் உள்ளே செல்ல யோசிக்கின்றனர். எனவே, அதற்கு தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். கோவிலுக்கு பக்தர்கள் வழங்கும் காணிக்கையை தங்கக்கட்டிகளாக மாற்றிய தி.மு.க அரசு அதனை அம்மனுக்கு பயன்படுத்தாமல் இருப்பதுதான் திராவிட மாடலா? இவ்வாறு மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் டாக்டர்.சரவணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications