"ஆதீனம் என்றால் ஜால்ரா அடித்து கொண்டு.. பதுங்கி இருக்க முடியாது!" ஆவேசமான மதுரை ஆதீனம்.. என்னாச்சு
மயிலாடுமதுரை: மதுரை பரவை ஆகாஷ் கிளப் மஹாலில் துறவியர் மாநாடு தொடங்கி உள்ள நிலையில், அந்த மாநாட்டில் மதுரை ஆதீனம் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளார்.துறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீன மடத்தில் ஆண்டுதோறும் பட்டின பிரவேச நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டு பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு முதலில் தடை விதிக்கப்பட்டது.
இந்த விஷயம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து ஆதீனங்களும் இது தொடர்பாக முதல்வரையும் சந்தித்து இருந்தனர்.

மதுரை ஆதீனம்
அதன் பின்னர் தருமபுரம் ஆதீன பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அந்த பின்னர், ஆதீன பட்டின பிரவேச நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இருப்பினும், இந்த விஷயத்தில் தேவையில்லாமல் தடை விதித்ததாக பக்தர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்தச் சூழலில் ஆதீனம் என்றால் பதுங்கி இருக்கவும் ஜால்ரா அடிக்கவும் முடியாது என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துறவியர் மாநாடு
மதுரை பரவை ஆகாஷ் கிளப் மஹாலில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை சார்பில் இரண்டு நாள் துறவியர் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மதுரை ஆதீனம், பேரூர் ஆதீனம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், "தமிழ்நாட்டில் இருக்கும் கோயில்களைத் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் விபூதி பூச மறுக்கின்றனர்.

ஜால்ரா அடிக்க முடியாது
தமிழ்நாட்டில் உள்ள கோயில் சொத்துகளைக் குத்தகை மற்றும் வாடைக்கு விட்டுள்ளனர். இருப்பினும், இதற்கான வாடகை தொகை முறையாக வருவதில்லை. இது குறித்து எதாவது கேள்வி கேட்டால் ஏதோ பிரச்சினை செய்கிறோம் என்ற ரீதியில் பேச ஆரம்பிக்கிறார்கள். ஆதீனம் என்றால் பதுங்கி கிடக்க முடியாது. ஜால்ராவும் அடிக்க முடியாது. இந்துக்கள் இடையே ஒற்றுமை இருக்க வேண்டும். இது குறித்துத் தான் நான் பிரதமர் மோடியிடம் பேசினேன்" என்று தெரிவித்தார்.

ஜால்ரா அடிக்க முடியாது
தமிழ்நாட்டில் உள்ள கோயில் சொத்துகளைக் குத்தகை மற்றும் வாடைக்கு விட்டுள்ளனர். இருப்பினும், இதற்கான வாடகை தொகை முறையாக வருவதில்லை. இது குறித்து எதாவது கேள்வி கேட்டால் எதோ பிரச்சினை செய்கிறோம் என்ற ரீதியில் பேச ஆரம்பிக்கிறார்கள். ஆதீனம் என்றால் பதுங்கி கிடக்க முடியாது. ஜால்ராவும் அடிக்க முடியாது. இந்துக்கள் இடையே ஒற்றுமை இருக்க வேண்டும். இது குறித்துத் தான் நான் பிரதமர் மோடியிடம் பேசினேன்" என்று தெரிவித்தார்.

மதமாற்றத்தைத் தடுக்க வேண்டும்
அவரை தொடர்ந்து பேரூர் ஆதீனம் மருதாசல அடிகள் இந்தக் கூட்டத்தில் பேசுகையில், "நாட்டில் மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்து வேண்டும். சமுதாய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும், சுற்றுச்சுழலைப் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், மாநிலத்தில் இருக்கும் கோயில்களை உடனடியாக தனித்து இயங்கும் வாரியத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்" என்றார்.

இரண்டு நாட்கள் மாநாடு
இரு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் மதமாற்றத்தைத் தடுப்பது, மதம் மாறி சென்றோரைத் தாய் மதத்திற்குத் திரும்புவதை ஊக்குவிப்பது, கிராமங்களில் ஏற்றத்தாழ்வுகளைப் போக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும். அதைத் தொடர்ந்து நாளை மாலை பொதுக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications