Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ்ஸுக்கு மீண்டும் இடி! தேவர் தங்க கவச உரிமையை திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்க கோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை வங்கி லாக்கரில் உள்ள பசும்பொன் தேவர் சிலை தங்க கவசத்திற்கு உரிமைக் கோரி அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, அதற்கான உரிமையை அவரிடமே வழங்க உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் மணிமண்டபத்தில் இருக்கும் தேவரின் உருவ சிலைக்கு அணிவிக்க அதிமுக சார்பில் தங்க கவசம் வழங்கப்பட்டுள்ளது.

Chennai HC Madurai Branch orders to give Devar gold kavasam to Dindigul Srinivasan

இந்த தங்க கவசம் குருபூஜையின் போது முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும். பின்னர் மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கியில் பாதுகாக்கப்படும். இதற்காக அதிமுக, தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் பெயரில் தனி வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதிமுக பொருளாளர் மற்றும் நினைவிட பொறுப்பாளர் கையெழுத்திட்டு தங்க கவசம் பெறப்படும்.

கடந்தாண்டு அதிமுக பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அப்பொறுப்பில் இருந்தும், அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனால் வங்கியில் உள்ள தங்க கவசத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என பிரச்சினை எழுந்தபோது ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதிமுக நிர்வாகிகள் பட்டியலுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டு தேவர் குருபூஜை விழா அக். 27 முதல் 30 வரை நடைபெறுகிறது. தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை அதிமுகவின் பொருளாளர் என்ற முறையில் என்னிடம் தான் ஒப்படைக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தலையிட்டு பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன. ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் தேவர் கவசத்துக்கு உரிமை கோர முடியாது. எனவே, பிரதான மனுவை விரைவில் விசாரணைக்கு எடுத்து உத்தரவு பிறப்பிக்கவும், அதுவரை அதிமுக- பசும்பொன் தேவர் நினைவாலய வங்கி கணக்கை அதிமுக பொருளாளர் என்ற முறையில் இயக்குவதற்கு எனக்கு அனுமதி வழங்கியும் உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடந்த 6ஆம் தேதி விசாரித்தார். அப்போது ஓபிஎஸ் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி மனுவுக்கு பதிலளிக்க 2 வாரம் கால அவகாசம் கோரினார். இதையேற்க மறுத்த நீதிபதி இது தொடர்பான வழக்குகளில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதனால் விசாரணையை அக்டோபர் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக தெரிவித்தார். அன்றைய தினத்திற்குள் ஓபிஎஸ் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

Chennai HC Madurai Branch orders to give Devar gold kavasam to Dindigul Srinivasan

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தேவர் கவசத்தை கையாளும் உரிமையை திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

தேவர் தங்க கவசம் இருக்கும் பாதுகாப்பு பெட்டகத்தை வங்கியிலிருந்து திண்டுக்கல் சீனிவாசன் எடுக்கலாம். தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் இணைந்து வங்கியிலிருந்து எடுக்க மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு தேவர் ஜெயந்தியின் போது தேவர் கவசத்தை திண்டுக்கல் சீனிவாசன் எடுத்து வருவார்.

அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என தேர்தல் ஆணையமே அங்கீகரித்துவிட்ட நிலையில் கோர்ட் தீர்ப்பும் அவருக்கு சாதகமாக அமையும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். கடந்த முறை அதிமுக பொருளாளர் தான்தான என ஓபிஎஸ்ஸும் தான்தான் என திண்டுக்கல் சீனிவாசனும் போட்டி போட்டனர். அப்போது வழக்கும் நிலுவையில் இருந்ததால் வங்கி அதிகாரிகள் இருவரிடமும் தங்கக் கவசத்தை கொடுக்கவில்லை. மாறாக தேவர் நினைவாலய பொறுப்பாளரிடம் ஒப்படைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+