அனுமதியின்றி எடுக்கப்படும் கற்களுக்கு டன் 1க்கு வெறும் ரூ.25 அபராதம் ? கனிமவளத்துறைக்கு நோட்டீஸ்
மதுரை: அப்துல்கலாம் அறிவியல் விவசாயிகள் மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஆபெல் மூர்த்தி என்பவர் குவாரிகளில் விதிமீறல்கள் உள்ளதாக வழக்கு தொடர்ந்துள்ளார். குவாரி தொடர்பான அரசாணையில், அனுமதியின்றி எடுக்கப்படும் கற்களுக்கு டன் ஒன்றுக்கு ரூ.25 அபராதம் என சலுகை உள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக கனிமவளத்துறை பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அப்துல்கலாம் அறிவியல் விவசாயிகள் மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஆபெல் மூர்த்தி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், தமிழகத்தில் பல்வேறு கிராமங்களில் ஏராளமான கல் குவாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்குவாரிகளால் அருகில் உள்ள கிராம மக்களுக்கு சுவாச பிரச்சினை, தூக்கமின்மை, இதய கோளாறு, காதுகேளாமை உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. அத்துடன் குவாரிகள் செயல்படும் பகுதிகளில் விவசாயம் அழிக்கப்படுவது தொடர்கிறது. அத்துடன் குவாரிகள் உருவாகுவதன் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற கல் குவாரிகளில் விதிமீறல்கள் அதிமாக உள்ளன.

அத்துடன் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கற்களை வெட்டி எடுப்பது, அனுமதி பெறாத பகுதிகளில் குவாரிகளை நடத்துவது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. இந்தநிலையில் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் (கடந்த ஆட்சியில்) கனிமவளத்துறை ஒரு அரசாணை பிறப்பித்து இருந்தது.
அதாவது விதிமீறல்களில் ஈடுபடும் கல் குவாரிகளுக்கு குறைந்த அபராத தொகை (அனுமதியின்றி வெட்டி எடுக்கப்படும் ஒரு டன் கற்களுக்கு ரூ.25 வீதம் அபராதம்) நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதே போல அபராதத்தொகையில் 20 சதவீதத்தை செலுத்தி மீண்டும் குவாரியை செயல்படுத்தலாம். அபராத தொகையை 2 மாதத்துக்கு ஒருமுறை என 6 கட்டங்களாக செலுத்தலாம் என்பது உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டிருககிறது. இதுபோன்ற சலுகைகளால் சட்டவிரோத குவாரிகளை நடத்துபவர்கள் கடும் தண்டனையில் இருந்து தப்பிக்கின்றனர். இதனை ஏற்க முடியாது.
இதன்மூலம் சட்டவிரோத குவாரிகளின் செயல்பாடுகள் அதிகரிக்கும். இந்த அரசாணையால் சுற்றுப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து தமிழக அரசின் கனிமவளத்துறை அதிகாரிகள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
சட்டவிரோதக் குவாரிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசாங்கமே, அவர்களுக்குச் சலுகை அளிப்பது போன்ற அரசாணைகளைப் பிறப்பிப்பது மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். எனவே, இந்த வழக்கில் கனிமவளத்துறை அளிக்கப்போகும் பதில் மற்றும் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புதான், தமிழ்நாட்டில் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்கும்
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
பொள்ளாச்சியில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.. கனிம வளத்துறை அமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?














Click it and Unblock the Notifications