முதல்வர் எடப்பாடியார் துவங்கும் பிரச்சாரம் எட்டு திக்கும் எதிரொலிக்கும் - அமைச்சர் ஆர்.பி உதயகுமார்
சட்டசபைத் தேர்தலுக்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று துவங்கும் பிரச்சாரம் எட்டு திக்கும் எதிரொலிக்கும் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரை: எடப்பாடி தொகுதியில் துவங்கும் வரலாற்று சிறப்பு தேர்தல் பிரச்சாரம் 2021ஆம் ஆண்டு மீண்டும் அம்மாவின் அரசை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைப்பதற்கான அச்சாரமாக அமையும் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். எடப்பாடியில் துவங்கும் பிரச்சாரம் எட்டு திக்கும் எதிரொலிக்கும் என்றும் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மதுரை மாவட்டம் தே. குண்ணத்தூரில் உள்ள சௌடாம்பிகை நெசவாளர் காலனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் திறந்து வைத்தார். நெசவாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இலவச மாஸ்க் பிஸ்கெட் போன்றவைகளை வழங்கினார் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்.

அப்போது அமைச்சரிடம் நெசவாளர் காலனியில் உள்ள வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கேட்டு கோரிக்கை வைத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார் அமைச்சர் ஆர்.பி உதயகுமார். முதியோர் உதவித்தொகை கேட்டு மனு கொடுத்தவர்களுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், எடப்பாடி தொகுதியில் துவங்கும் வரலாற்று சிறப்பு தேர்தல் பிரச்சாரம் 2021ஆம் ஆண்டு மீண்டும் அம்மாவின் அரசை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைப்பதற்கான அச்சாரமாக அமையும் என்று கூறினார். எடப்பாடியில் துவங்கும் பிரச்சாரம் எட்டு திக்கும் எதிரொலிக்கும் என்றும் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழாவிற்கு வந்த அமைச்சர்களுக்கு உள்ளூர் அதிமுகவினர் மட்டுமல்லாது பாஜக நிர்வாகிகளும் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர் .












Click it and Unblock the Notifications