Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு நாளாச்சும் கோர்ட் உத்தரவை நிறைவேத்திட்டு அப்புறம் வாங்க.. டோல்கேட் வழக்கில் விளாசிய ஐகோர்ட்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: சுங்கச்சாவடி கட்டண உத்தரவில் நீதிமன்றம் பின்வாங்காது என்றும், ஒரு நாளாவது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றிவிட்டு பிறகு நீதிமன்றத்தை அணுகுங்கள் அப்போது உங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்யலாம் என்றும் ஐகோர்ட் கிளை நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக இருப்பதால் இந்த சாலையை சீரமைக்கும் வரை வாகைக்குளம் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த பெர்டியன் ராயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

High court bench slams NHAI on Vagaikulam toll gate case

இந்த வழக்கு ஐகோர்ட் கிளையில் எஸ். சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, தூத்துக்குடி நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க உத்தரவு பிறப்பித்தனர். கட்ந்த 6 ஆண்டுகளாக சாலை ஏன் மோசமாக உள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

திருநெல்வேலி - துாத்துக்குடி இடையிலான நான்கு வழிச்சாலையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால் வாகைக்குளம் டோல்கேட்டில் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இதுவரை அமல்படுத்தாமல் தாமதப்படுத்தி வருகிறது. கட்டணத்தை குறைக்கும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை இதுவரை அமல்படுத்தவில்லை.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், "தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் சுங்கச்சாவடியில் டோல்கேட் கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்க கோரிய வழக்கில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன்?"என தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

மேலும், சுங்கச் சாவடி கட்டணம் குறித்த உத்தரவில் நீதிமன்றம் பின்வாங்காது என்றும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருந்துவிட்டு தடை உத்தரவை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்வது ஏற்புடையது அல்ல என்றும் ஒரு நாளாவது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றிவிட்டு பின்பு நீதிமன்றத்தை அணுகுங்கள், அப்போது இடைக்கால தடையை திரும்ப பெறுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என நீதிபதிகள் காட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+