விநாயகர் சிலை கரைப்பு.. அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்த ஐகோர்ட் கிளை!
மதுரை: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். இதில் மத்திய, மாநில மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் விதிமுறைகள், உத்தரவுகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி விழாக்கோலம் பூண்டுள்ளது. கோயில்கள், வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து வழிபட்டு பின்னர் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அந்த வகையில் விழாவுக்கான விநாயகர் சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது. பல்வேறு வடிவங்களிலும் வண்ணங்களிலும் விநாயகர் சிலைகளை மக்கள் வாங்கிச் சென்றனர்.

மதுரை, தென்காசி, திருச்சி, தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, புதுக்கோட்டை மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.
இந்த வழக்குகள் நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதி, பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி அமைதியான முறையில் கொண்டாடுவதற்கு அனுமதி வழங்கியும், பல்வேறு மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் சில மனுக்களை தள்ளுபடி செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். இதில் மத்திய, மாநில மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்கள், விதிமுறைகள், உத்தரவுகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். மனிதர்களுக்கு மட்டுமல்ல பிற உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் சிலைகள் கரைக்கப்படுவது அவசியம்.
ரசாயன வண்ண பூச்சுகள் அல்லது பிற மக்காத பொருட்கள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் சிலைகளில் சேர்க்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை விழா ஏற்பாட்டாளர்கள் அதிகாரிகளிடமிருந்து பெற்று இருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்தது என சான்று வழங்கப்பட்ட சிலைகள் மட்டுமே நீர் நிலைகளில் கரைக்கப்பட வேண்டும்.
இந்த சான்று பெறாத சிலைகளை பொறுத்தவரை செயற்கை நீர் நிலைகளில் கரைப்பதற்கு ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரர்களைப் பொறுத்தவரை விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது அவர்களின் உரிமை. அதே நேரத்தில் இந்த விழா பொறுப்பான முறையிலும், சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என்பதை இந்த நீதிமன்றம் தெளிவு படுத்துகிறது" என நீதிபதி உத்தரவிட்டார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications