ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் விழா! டீ-சர்ட்டில் சாதி அடையாளம் கூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடி.!
மதுரை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் கோவிலின் ஆடி உற்சவ திருவிழா மற்றும் தேர் திருவிழாவில் சாதிய தலைவர்களின் உருவப்படம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்களை அணியவும், சாதி அடையாளம் கொண்ட ரிப்பன்கள், துண்டு கொடிகள் ஆகியவற்றை பயன்படுத்தவும் தடை விதிப்பதோடு, குறிப்பிட்ட சமுதாயத்திற்கு சார்பாக கோஷங்களை எழுப்பவும் தடை விதிக்க கோரி தொடரப்பட்ட நிலையில், சாதிய அடையாளமின்றி தேர் திருவிழா நடப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சேர்ந்த சந்தனகுமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் கோவிலின் ஆடி உற்சவ திருவிழா மற்றும் தேர் திருவிழா ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில் சீர்பாதம், எம்புதடி போடுதல், எண்ணெய் கொடுத்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.
இதில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அந்த சமூகத்தின் அரசியல் தலைவர் படம் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்களை அணிந்து கொண்டு எம்புதடி நிகழ்வை கடந்த சில ஆண்டுகளாக செய்து வருகின்றனர். அதோடு தலையில் குறிப்பிட்ட வண்ண ரிப்பன்களை கட்டிக்கொண்டும், துண்டு அணிந்து கொண்டும், கொடிகளை கையில் வைத்துக் கொண்டு, சாதிய அரசியல் தலைவர்களுக்கு சாதகமாக கோஷங்களை எழுப்பிக் கொண்டும் தேர் திருவிழாவில் பங்கேற்கின்றனர்.
இது எந்த வகையிலும் கோவில் திருவிழாவோடு தொடர்புடையது அல்ல. தேர் திருவிழாவில் தேவையற்ற பிரச்சனைகள் எழ இவை காரணமாக அமைகின்றன. இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே ஆடி உற்சவ திருவிழாவின் கடைசி நாள் அன்று சாதிய தலைவர்களின் உருவப்படம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்களை அணியவும், சாதி அடையாளம் கொண்ட ரிப்பன்கள், துண்டு கொடிகள் ஆகியவற்றை பயன்படுத்தவும் தடை விதிப்பதோடு, குறிப்பிட்ட சமுதாயத்திற்கு சார்பாக கோஷங்களை எழுப்பவும் தடைவிதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், " இது தொடர்பாக அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், "அமைதிப் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், ஒற்றுமையாக இணைந்து திருவிழாவை நடத்த வேண்டும். சாதிய அடையாள டி-ஷர்ட்டுகள் அணிவது, கொடி பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. சாதிய அடையாளமின்றி தேர்திருவிழா நடப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications