அறையில் கிடைத்த ஐடி ஆவணங்கள்.. சிறையிலுள்ள சசிகலாவிற்கு நோட்டீஸ்.. ஹைகோர்ட் கிளை அதிரடி
மதுரை: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பதவி நீட்டிப்பு குறித்த ஆவணங்கள், சசிகலா கையில் சிக்கியது எப்படி என்று, சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்தார்.
குட்கா முறைகேடு தொடர்பான ஆவணங்களை திட்டமிட்டு மறைத்து டி.கே.ராஜேந்திரன் பதவி நீட்டிப்பு பெற்றார். அவர் மீதான புகார் குறித்து வருமான வரித்துறை அனுப்பிய கடிதம் கிடைக்கவில்லை என்று தலைமை செயலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த ஆவணங்கள் சசிகலாவின் அறையிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டு நவம்பரில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது அந்த ஆவணங்களை கண்டுபிடித்தனர். டி.கே.ராஜேந்திரனுக்கு உதவி செய்வதற்காக இந்த வருமானவரித்துறை கடிதம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. எனவே ராஜேந்திரன் பணி நீட்டிப்பு சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற கிளை நீதிபதி சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
காணாமல் போனதாக கூறப்பட்ட ஆவணங்கள் அரசில் எந்த ஒரு பொறுப்பிலும் இல்லாத சசிகலா, அறையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து, மத்திய, மாநில அரசுகள், சசிகலா மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்து வரும் ஜனவரி 2ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications