அத்தியாவசிய பணிகளுக்கு முன்னுரிமை தராத அரசுகள்.. வரிப்பணத்தில் இலவசம்! ஐகோர்ட் மதுரை கிளை அதிருப்தி!
மதுரை: அத்தியாவசிய பணிகளுக்கு முன்னுரிமை தராத அரசுகள், மக்களுக்கு இலவசங்களை வழங்க வரிப்பணத்தை பயன்படுத்துவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.
அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்காக என்ற பெயரில் நிலம் கையகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் அங்கு திட்டப் பணிகள் தொடங்கப்படாததால் தங்கள் நிலத்தை திருப்பி ஒப்படைக்கக்கோரி சம்பந்தப்பட்ட நிலம் உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

அதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையில் ஆண்டுக்கு இது போன்ற 100 வழக்குகள் தாக்கலாவதாகவும் 200 முதல் 300 வரையிலான நிலங்களில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தாத காரணத்தால் விடுவிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் வளர்ச்சித் திட்டங்களை முழுமையாக அரசு செயல்படுத்துகிறதா என்பதில் நீதிமன்றம் சந்தேகம் கொள்வதாக கூறினார்.
அரசு அறிவித்த மாஸ்டர் பிளான், வளர்ச்சித் திட்டங்களின் எண்ணிக்கை, மண்டல வாரியான திட்டப்பணிகள், உள்ளிட்ட விவரங்கள் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய நகர் ஊரமைப்புக்கு அறிவுறுத்தியும் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்ற அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
ஏறக்குறைய அனைத்து அரசுகளும் அத்தியாவசிய பணிகளுக்கு முன்னுரிமை தராத அரசுகள், மக்களுக்கு இலவசங்களை வழங்க வரிப்பணத்தை பயன்படுத்துவதாக அதிருப்தியை பதிவு செய்தார். பொது நிதியை இலவசங்களுக்கு பயன்படுத்துவது அரசின் கொள்கை முடிவாக இருந்தாலும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கான அதிகாரம் அரசியலமைப்பு சட்டப்படி உள்ளதாக சுட்டிக்காட்டினார்.
வளர்ச்சித் திட்டங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டு 5 ஆண்டுகளுக்கு பின்னரும் கையகப்படுத்தப்பட்ட நிலம் பயன்படுத்தப்படாமல் இருந்தால் நிலத்தின் உரிமையாளர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு மனுதாரர்களுக்கு மீண்டும் நிலம் கொடுக்கப்படுவதாக உத்தரவிட்டார். அத்துடன் மனுதாரர்களுக்கு ரூ.5,000 இழப்பீடு தர வேண்டும் என நகர் ஊரமைப்பு இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டத்தை அரசு செயல்படுத்தி வரும் நிலையில், இலவசங்கள் பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை கூறியுள்ள கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
Savukku Shankar: சவுக்கு சங்கர் நாளைக்குள் சரண் அடைய வேண்டும்.. இல்லையென்றால் கைது செய்யலாம்! ஐகோர்ட் அதிரடி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications