இந்தா கிளம்பிட்டாங்கல்ல.. பக்ரீத் வருதே! ஆடு, மாடுகளை பலியிட தடைகோரிய வழக்கு - மறுத்த உயர்நீதிமன்றம்
மதுரை: பக்ரீத் பண்டிகையின்போது ஆடு, மாடுகளை அனுமதி பெறாத இடங்களில் வெட்டுவதற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதிக்க மறுத்து உள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஜூன் 29 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் 2 பண்டிகைகளில் ஒன்றான இந்த பக்ரீத் பண்டிகை அரபு மாதமான துல்ஹஜ் மாதத்தின் 10 வது நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 19 ஆம் தேதி மாலை துல் ஹஜ் பிறை பார்க்கப்பட்டது.

இதனை அடுத்து 29 ஆம் தேதி ஹஜ் பெருநாள் என்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு தலைமை காஜி சலாஹுதீன் முஹம்மது அயூப் வெளியிட்ட அறிவிப்பில், "ஹிஜ்ரி 1444 துல் கஃதா மாதம் 29 ஆம் தேதி திங்கட்கிழமை ஆங்கில மாதம் 19-06-2023 தேதி அன்று மாலை துல் ஹஜ் மாத பிறை நாகூர்யில் காணப்பட்டது.
ஆகையால் செவ்வாய்க்கிழமை ஆங்கில மாதம் 20-06-2023 தேதி அன்று துல் ஹஜ் மாத முதல் பிறை அன்று ஷரியத் முறைப்படி நிச்சயிகப்பட்டிருக்கிறது. ஆகையால் ஈதுல் அத்ஹா (பக்ரீத்) வியாழக்கிழமை 29-06-2023 தேதி கொண்டாடப்படும்." என்று அறிவித்து இருந்தார்,
பக்ரித் பண்டிகையை முன்னிட்டு பொருளாதார சக்தி கொண்ட இஸ்லாமியர்கள் குர்பானி என்ற பெயரில் ஆடு, மாடு, ஒட்டகங்களை வெட்டி ஏழைகளுக்கு வழங்கி உதவுவது முக்கிய சடங்காக பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் ஒட்டங்களை அறுத்து பலியிட தடை விதிக்கப்பட்டது.
எனவே ஆடு, மாடுகளை வெட்டி இஸ்லாமியர்கள் குர்பானி கொடுத்து வருகின்றனர். இன்னும் சில நாட்களில் பக்ரித் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல கோடி மதிப்பில், ஆடு, மாடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தான் ஆடு, மாடுகளை பக்ரித் பண்டிகையன்று அனுமதி இல்லாத இடங்களில் பலியிட தடைகோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்தார். அவரது மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, பண்டிகை என்ற காரணத்தால் மாநகராட்சி அனுமதி தராத இடங்களில் ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க முடியாது என்றும், கடந்த ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தின் அடிப்படையில் கடைசி நேரத்தில் தடை கேட்டு வந்து இருப்பதாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications