கனிம வளக் கொள்ளை.. கண்டுகொள்ளாத திண்டுக்கல் கலெக்டர்! உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு
மதுரை: திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத கல் குவாரிகள் செயல்பட்டு வரும் நிலையில், சிறப்பு குழு அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், சட்டவிரோத கல்குவாரிகளை தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கனிம வளங்களை பாதுகாப்பது கனிமவளத்துறை அதிகாரிகளின் பொறுப்பு என தெரிவித்துள்ளனர். மேலும், சட்டவிரோத குவாரி நடவடிக்கை தொடர்பாக கனிமவளத்துறை ஆணையர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், வருவாய் மண்டல அலுவலர்கள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
திண்டுக்கல் பால்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், " கடந்த 2011 ஆம் ஆண்டு கனிம வளங்கள் கடத்தலை தடுப்பதற்கான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன இந்த நிலையில் மணல் மற்றும் சரளை கற்களை சிறு கனிமங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இவை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சுற்றுச்சூழல் கண்காணிப்பு வழிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டன. அவ்வாறு இருக்கும் போது, திண்டுக்கல் மாவட்டம் வடக்கு, தெற்கு, நிலக்கோட்டை, வேடசந்தூர், ஆத்தூர் வருவாய் மண்டலங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக, சட்டவிரோதமாக கனிமவளங்கள் எடுக்கப்படுகின்றன.

திண்டுக்கல் குவாரி வழக்கு
JCB, ஹிட்டாச்சி உள்ளிட்ட கனரக வாகனங்கள் பயன்படுத்தப்படுவதால் 10 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் கனிமவளங்கள் மற்றும் சவடு மண் எடுக்கப்பட்டன. இது தொடர்பாக புகார்களின் பெயரில் ஆய்வு செய்வதற்காக சிறப்பு குழுவை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நியமித்தார். அதன்படி, நிலக்கோட்டை தாசில்தார் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு பச்சைமலையான்கோட்டை கிராமத்தில் ஆய்வு செய்ததில் சட்டவிரோத குவாரி நடவடிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
மற்றொரு சிறப்பு குழு ஆத்தூர் தாலுகாவில் பாரப்பட்டி, பஞ்சம்பட்டி, வக்கம்பட்டி, சீவார்சருகு உள்ளிட்ட கிராமங்களில் சட்டவிரோத குவாரி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது தெரியவந்தது. இதேபோல் திண்டுக்கல் மேற்கு தாலுகா பகுதியில் ஆய்வு செய்ததிலும் சட்டவிரோத நடவடிக்கை உறுதியாகியுள்ளது. இவ்வாறு திண்டுக்கல் மாவட்டத்தில் சத்திரப்பட்டி, கோலப்பட்டி, தென்னம்பட்டி, பெரும்புள்ளி, பாடியூர், நத்தம்பட்டி, சிந்துவார்பட்டி வி.புதுக்கோட்டை உள்ளிட்ட பல கிராமங்களில் முறையான உரிமம் கூட பெறாமல் சட்டவிரோதமாக குவாரி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது உறுதியாக உள்ளது.
திண்டுக்கல் ஆட்சியர்
இந்த ஆய்வுகள் குறித்து சிறப்பு குழுக்கள் தங்களது அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்துள்ளனர். ஆனால், சம்பந்தப்பட்ட குவாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை குறிப்பாக வேடசந்தூர் தாலுகாவில் சட்டவிரோத சரலை கற்கள் குவாரிகள் பிரதானமாக செயல்பட்டு வருகிறது.
ஆத்தூர் குவாரி
ஆகவே திண்டுக்கல் கிழக்கு, நிலக்கோட்டை, ஆத்தூர் வருவாய் மண்டல பகுதிகளில் தாலுகா அளவிலான சிறப்பு குழுக்களால் செய்யப்பட்ட ஆய்வு அறிக்கைகளின் அடிப்படையில் கோலப்பட்டி, தென்னம்பட்டி, பெரும்புள்ளி, பாடியூர், நத்தம்பட்டி, சிந்துவார்பட்டி வி. புதுக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற சட்டவிரோத குவாரிகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
நீதிமன்ற உத்தரவு
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு, "கனிம வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வருவாய் துறை அதிகாரிகளே அதற்கான பொறுப்புடையவர்கள். ஆகவே திண்டுக்கல் மாவட்டத்தில் குறிப்பாக மனுதாரர் குறிப்பிடும் பகுதிகளில் நடைபெற்ற சட்டவிரோத குவாரி நடவடிக்கை தொடர்பாக கனிமவளத்துறை ஆணையர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், வருவாய் மண்டல அலுவலர்கள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications