அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறி பாயும் காளைகள்... அடக்க குவிந்த காளையர்கள்..!
மதுரை: பொங்கல் திருநாளையொட்டி வழக்கமான உற்சாகத்துடன் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
Recommended Video

இந்த ஜல்லிக்கட்டை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை என்றாலே அனைவரது கவனமும் மதுரை மாவட்டத்தின் பக்கம் திரும்புவது இயல்பு. காரணம் அங்கு 3 இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்திபெற்றவை.

ஆண்டுதோறும் மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியானது மற்ற இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டை விட தனித்துவம் மிக்கதாக கருதப்படுகிறது.
இந்நிலையில் இன்று அவனியாபுரத்தில் உறுதிமொழி வாசித்து ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் அன்பழகனும் அமைச்சர் செல்லூர் ராஜூவும் காலை 8 மணிக்கு தொடங்கி வைத்தனர்.
முதலில் ஊர் மரியாதை காளை வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. அந்தக் காளையை எந்த வீரர்களும் அடக்கக் கூடாது என்றும் தொட்டுக் கும்பிட்டுக் கொள்ளுமாறும் விழா கமிட்டி சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி அந்தக் காளையை தொட்டுக் கும்பிட்டு அடுத்தடுத்து அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை வீரர்கள் அடக்கினர்.
இதனிடையே அவனியாபுரம் ஜல்லிக்கட்டி சிறந்த மாடு வீரருக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என விழா மேடையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதேபோல் காங்கிரஸ் சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு பைக் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications