Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கீழடி என்றாலே சிலருக்கு பயம்.. அகழாய்வுகளின் அறிக்கையை வெளியிட முடியல! அமர்நாத் ராமகிருஷ்ணன் ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: கீழடி அகழ்வாராய்ச்சியை மேற்கொண்ட இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர் ராமகிருஷ்ணன், வரலாற்றை மாற்றும் அகழாய்வு அறிக்கைகளை வெளியிடுவதில் தடங்கல் இருப்பதாக கூறியுள்ளார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கி.மு. 300 -இல் தான் நமது சங்கக் காலமும், நாகரீகமும் தொடங்குகிறது என இன்று வரை வரலாற்று மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறார்கள்.

தமிழகத்தில் நடத்தப்பட்டிருக்கும் ஆய்வுகள் மூலம் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த ஆதாரங்கள் எல்லாம் வெளிப்படையாக வெளி உலகிற்கு தெரியாத காரணத்தாலேயெ நமது வரலாற்றை இன்றும் மாற்ற முடியாமல் இருக்கின்றோம். அது எப்போது மாறும்.. இதை மாற்ற முயற்சிப்பதாலேயே இவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறோம் என்று கூறினார்.

Keezhadi scares some people unable to release excavation reports Amarnath Ramakrishnan slams

கீழடி அகழ்வாராய்ச்சி

தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த நாகரீகங்கள் மற்றும் மக்களின் வாழ்க்கை முறைகள் பற்றிய உண்மைகளை வெளிக்கொணர அகழ்வாராய்ச்சிகளானது நடத்தப்படுகிறது. இதில் கீழடி, ஆதிச்சநல்லூர், கொற்கை போன்ற இடங்களில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் தமிழ்நாட்டின் தொன்மை நாகரீகத்தை வெளிக்கொணர்ந்துள்ளது.

இதில் கீழடியில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிக்கு இந்திய தொல்லியியல் ஆராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கியதோடு, பல்வேறு கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். ஆனால் இந்த அகழ்வாராய்ச்சியினை முழுமையாக முடிக்கும் முன்பே அவரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டது மத்திய அரசு. இதுமட்டுமல்லாமல் அவர் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையினையும் மத்திய அரசு வெளியிடவில்லை.

எழுத்து பிழையை மட்டுமே திருத்துவேன்..

அமா்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட அகழ்வாராய்சி அறிக்கையினை திருத்தி எழுதி சமர்பிக்குமாறு இந்திய தொல்லியியல் துறை கடிதம் அனுப்பியுள்ளது. இதற்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையில் எழுத்து பிழையை வேண்டுமானால் திருத்துவேன்.. உண்மையைத் திருத்த மாட்டேன் என்று பதில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தான் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் வரலாற்றை மாற்றும் அகழாய்வு அறிக்கைகளை வெளியிடுவதில் தடங்கல் இருப்பதாக கூறியுள்ளார்.

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கீழடி விவகாரம் குறித்து பேசிய அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியதாவது:-இந்தியா என்ற பன்முகத்தன்மைக்கு எதிராக பயம் கொண்டுள்ளார்கள்.. அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை? கீழடி உலகம் முழுவதும் பேசப்படுகிறது.. ஆனால் கீழடி என்றாலே ஏன் சிலருக்கு பயம் வருகிறது.. இதற்கு விரிவான அகழாய்வு நடைபெற்றதே காரணம்.

15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள்

இந்திய துணைக் கண்டத்தில் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ள ஒரே இடம் என்றால் அது தமிழ்நாடு தான்.. கீழடியில் இதுவரை 5 சதவீதம் ஆய்வு கூட செய்யப்படவில்லை. ஆனால் இந்த ஆய்வே இன்று உலகை பேச வைத்துக் கொண்டிருக்கிறது.

கிமு 300-இல் தான் நமது சங்கக் காலமும், நாகரீகமும் தொடங்குது என இப்போ வரை வரலாற்று மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்துட்டு இருக்காங்க.. இது எப்போது மாறும் என தெரியவில்லை. தமிழகத்தில் நடத்தப்பட்டிருக்கும் ஆய்வுகள் மூலம் பல ஆதாரங்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. ஆனால், இந்த ஆதாரங்களை எல்லாம் வெளி உலகிற்கு வெளிப்படையாக தெரியாததால் தான் நம் வரலாற்றை இன்னும் நம்மால் மாற்ற முடியவில்லை.

பல மாற்றங்களை ஏற்படுத்தும்

எவ்வளவோ ஆய்வுகள் நடந்து இருக்கின்றன. ஆனால் எதையும் அப்டேட் செய்யாமல் இருக்கிறோம். இதனை மாற்ற முயற்சிப்பதால்தான் இப்போது இவ்வளவு பிரச்சினைகள். உண்மை கருத்துகளை சொல்வது என்பதில் ஆணித்தரமாக உள்ளோம். என்னிடம் இருக்கும் ஆய்வறிக்கை வெளியே வந்தால்தான் உலகத்துக்கு தெரியும்.

ஆனால் அதை வெளியிடுவதில் பல தடங்கல்கள் ஏற்படுகின்றன. தொல்லியியலில் ஆதாரங்கள் கிடைக்கும் போதெல்லாம் பல மாற்றங்களை ஏற்படுத்தும். அது பல ஆய்வுகளுக்கு வழிவகுக்கின்றன.. " எனத் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+