மோடியும் ஹிட்லர் போலத்தான்.. பாசிசவாதி.. வைகோ கடும் தாக்கு
மதுரை: "பிரதமர் மோடி ஹிட்லரை போல ஒரு பாசிசவாதி. ஆட்சி அதிகாரத்தை இழக்க ஒருபோதும் விரும்பமாட்டார். அதற்காக ஹிட்லரை போல செயல்படுகிறார்" என்று வைகோ கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஏற்கனவே விவசாயிகள் போராட்டத்தில் மோடி அக்கறை காட்டவில்லை என்று வைகோ விமர்சித்திருந்தார். அப்போது விதவிதமாக டிரஸ் போடுவது, தினம் ஒரு நாடு போவது என்று கூறியிருந்தார். இதற்கு தமிழக பாஜக தரப்பில் பெரும் கண்டனம் எழ ஆரம்பித்தது.
இதற்கு நடுவில் மேகதாது விவகாரம் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வரும் பிரதமர் மோடியை உள்ளே விடமாட்டோம் என்று வைகோ கர்ஜித்தார்.

கடும் கண்டனம்
வைகோவின் இந்த பேச்சுக்கும் பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்போது திரும்பவும் மோடியை பற்றி குற்றஞ்சாட்டி உள்ளார் வைகோ. மதுரை தல்லாகுளத்தில், அம்பேத்கார் நினைவு நாளையொட்டி அங்கிருந்த அவரது சிலைக்கு வைகோ மரியாதை செலுத்தினார்.

மோடி ஒரு பாசிசவாதி
பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ சொன்னதாவது: "பிரதமர் மோடி ஹிட்லரை போல ஒரு பாசிசவாதி. ஆட்சி அதிகாரத்தை இழந்துவிட ஒருபோதும் விரும்பமாட்டார். நாடாளுமன்றத்துக்கு தீயை வைத்து விட்டு கம்யூனிஸ்டுகள் மீது அன்று பழியை போட்டவர்தான் ஹிட்லர்.

ஓட்டுக்கு பணம்
அது போலதான் பிரதமர் மோடியும். தன்னுடைய ஆட்சியை தக்க வைக்க எந்த அளவுக்கும் போகக்கூடியவர். இதுவரை எத்தனையோ முறை வட மாநிலங்களில் தேர்தல் நடந்துள்ளது. ஆனால், இப்போதுதான் ஓட்டுக்கு பணம் என்பதை பாஜகவினர் ஆரம்பித்து வைத்துள்ளனர்.

கூட்டாட்சி தத்துவம்
அண்ணல் அம்பேத்கார் இயற்றிய இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக வந்தால் அரசமைப்பு சட்டம் நாசமாக்கப்படும். கூட்டாட்சி தத்துவம், மதசார்பின்மை தகர்க்கப்படும்" என்றார்.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications