Madurai Airport: உடனடியாக அமல்.. சர்வதேச விமான நிலையமானது மதுரை.. வெளியானது அரசாணை.. என்னென்ன பலன்?
மதுரை: மதுரை விமான நிலையத்தை (Madurai Airport)சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்பது தென்மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையைாக இருந்தது. இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் தான் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அங்கீகரித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், உடனடியாக அமலாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் பலன்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் மொத்தம் 10 விமான நிலையங்கள் உள்ளன. இதில் ஓசூர் மற்றும் நெய்வேலி விமான நிலையங்கள் தனியாருக்கு சொந்தமானது.
சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்டவை உள்நாட்டு விமான நிலையமாக உள்ளது. சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்டவை வெளிநாட்டு விமான நிலையமாக செயல்பட்டு வருகிறது.

சர்வதேச விமான நிலையம்
இந்நிலையில் தான் மதுரையில் செயல்பட்டு வரும் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்பது தென்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இதுதொடர்பாக தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு வந்தது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் கடந்த 10ம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் , மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அரசாணை
அதன்படி தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் , மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக உடனடியாக செயல்பாட்டுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
என்னென்ன பலன்கள்?
இதன்மூலம் பல்வேறு பலன்கள் கிடைக்க உள்ளது. வெளிநாடுகள் - மதுரை இடையேயான விமான போக்குவரத்து அதிகரிக்கும். மதுரைக்கு துபாய், அபுதாபி, கொழும்பு உள்ளிட்ட இடங்களில் இருந்து விமானங்களை இயக்க பல நிறுவனங்கள் ரெடியாக உள்ளன. இனி இந்த இடங்களுக்கான விமான சேவைகள் அதிகரிக்கும். இதன்மூலம் அரபு நாடுகளுக்கு பணியாற்ற விமான பயணங்கள் மேற்கொள்ள நினைக்கும் மக்கள் திருவனந்தபுரம் செல்லாமல் மதுரையில் இருந்தே பயணிக்கலாம்.
சுற்றுலா மேம்படும்
மேலும் மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியன் சுவாமி கோவில், அழகர் கோவில் உள்பட ஏராளமான கோவில்கள் உள்ளன. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் நேரடியாக மதுரை வர முடியும். இது மதுரையை சுற்றுலா இடமாகவும், அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். சுற்றுலா மேம்படும். அதேபோல் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியை மதுரை விமான நிலையம் வழியாக மேற்கொள்ள முடியும். இப்படியாக பல்வேறு பலன்கள் கிடைக்க உள்ளது.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications