Madurai Airport: உடனடியாக அமல்.. சர்வதேச விமான நிலையமானது மதுரை.. வெளியானது அரசாணை.. என்னென்ன பலன்?
மதுரை: மதுரை விமான நிலையத்தை (Madurai Airport)சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்பது தென்மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையைாக இருந்தது. இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் தான் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அங்கீகரித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், உடனடியாக அமலாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் பலன்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் மொத்தம் 10 விமான நிலையங்கள் உள்ளன. இதில் ஓசூர் மற்றும் நெய்வேலி விமான நிலையங்கள் தனியாருக்கு சொந்தமானது.
சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்டவை உள்நாட்டு விமான நிலையமாக உள்ளது. சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்டவை வெளிநாட்டு விமான நிலையமாக செயல்பட்டு வருகிறது.

சர்வதேச விமான நிலையம்
இந்நிலையில் தான் மதுரையில் செயல்பட்டு வரும் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்பது தென்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இதுதொடர்பாக தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு வந்தது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் கடந்த 10ம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் , மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அரசாணை
அதன்படி தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் , மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக உடனடியாக செயல்பாட்டுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
என்னென்ன பலன்கள்?
இதன்மூலம் பல்வேறு பலன்கள் கிடைக்க உள்ளது. வெளிநாடுகள் - மதுரை இடையேயான விமான போக்குவரத்து அதிகரிக்கும். மதுரைக்கு துபாய், அபுதாபி, கொழும்பு உள்ளிட்ட இடங்களில் இருந்து விமானங்களை இயக்க பல நிறுவனங்கள் ரெடியாக உள்ளன. இனி இந்த இடங்களுக்கான விமான சேவைகள் அதிகரிக்கும். இதன்மூலம் அரபு நாடுகளுக்கு பணியாற்ற விமான பயணங்கள் மேற்கொள்ள நினைக்கும் மக்கள் திருவனந்தபுரம் செல்லாமல் மதுரையில் இருந்தே பயணிக்கலாம்.
சுற்றுலா மேம்படும்
மேலும் மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியன் சுவாமி கோவில், அழகர் கோவில் உள்பட ஏராளமான கோவில்கள் உள்ளன. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் நேரடியாக மதுரை வர முடியும். இது மதுரையை சுற்றுலா இடமாகவும், அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். சுற்றுலா மேம்படும். அதேபோல் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியை மதுரை விமான நிலையம் வழியாக மேற்கொள்ள முடியும். இப்படியாக பல்வேறு பலன்கள் கிடைக்க உள்ளது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்














Click it and Unblock the Notifications