பாலமேடு ஜல்லிக்கட்டு விழா குழுவில் ஜாதிக்கு பிரதிநிதித்துவம் கோரிய மனு டிஸ்மிஸ்!
மதுரை: மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் தங்களது ஜாதிக்கும் பிரதிநிதித்துவம் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை பாலமேடு அழகு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். அதில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோது ஜாதி பாகுபாடின்றி மக்கள் அனைவரும் போராடியதால் வெற்றி கிடைத்தது; அரசு ஜல்லிக்கட்டு நடத்த சட்டத்திருத்தம் கொண்டுவந்தது.

தை பொங்கலையொட்டி ஜன.,15 ல் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மாடு பிடி வீரர்களின் பெயர்கள் மற்றும் காளைகளை பதிவு செய்ய ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் மறுக்கின்றனர். விழாக்குழுவில் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்க உத்தரவிட வேண்டும். என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் யார், யார் இடம்பெறுவது என நீதிமன்றம் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க இயலாது. சட்ட விதிகள்படி மதுரை மாவட்ட ஆட்சியர் முடிவெடுப்பார். ஆகையால் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்றனர்.












Click it and Unblock the Notifications