ஒரே சமயத்தில் சித்திரைத் திருவிழாவும், தேர்தலும்.. மதுரையில் கூடி ஆலோசித்த 6 எஸ்.பிக்கள்!
Recommended Video
மதுரை: மதுரையில் நடைபெற உள்ள சித்திரை திருவிழா மற்றும் பாராளுமன்ற தேர்தலையொட்டி, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து சிறப்பு டிஜிபி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மதுரையில் வருகிற 8 ம் தேதி சித்திரை திருவிழா தொடங்குகின்றது. இதில், முக்கிய நிகழ்வான தேரோட்டம் 18 ம் தேதியும், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு 19ம் தேதியும் நடைபெறுகின்றது.
அதே போல், பாராளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவும் 18ம் தேதி நடைபெறுவதால், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு குறித்து, சிறப்பு டி.ஜி.பி விஜயகுமார் தலைமையில், மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.
இதில், தென் மண்டல காவல்துறை ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், மதுரை மாநகர் காவல்துறை ஆணையர் டேவிட்சன், தேவ ஆசிர்வாதம் மற்றும் மதுரை டிஐஜி பிரதீப் குமார், திண்டுக்கல் டிஐஜி ஜோஷி நிர்மல்குமார், ராமநாதபுரம் டிஐஜி திருமதி.காமினி மற்றும் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்ட எஸ்.பிக்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில், சித்திரை திருவிழாவின் போது எத்தனை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எங்கெங்கு கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பது, போக்குவரத்து மாற்றங்கள் குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருவிழா ஏற்பாடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள வாக்கு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்