மதுரையில் எடப்பாடி பிரசாரம் அமமுகவை அதிர வைத்த கூட்டம்!
மதுரை: மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிரசாரத்தின்போது கூடிய கூட்டம் அமமமுகவினரை அயர்ந்து போக வைத்துள்ளதாக அதிமுக தரப்பில் கூறுகின்றனர்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். அ.தி.மு.கவின் கோட்டை என்று கருதப்படும் தென் மாவட்டங்களின் தலைமை நகரமான மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.
அமமுக ஆதரவு அதிகம் உள்ள பகுதியாக கூறப்படும் மேலூரில் நடந்த பிரசாரத்தில் ஏராளமான மக்கள் திரண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர்.
அ.தி.மு.கவின் கோட்டை என்று கருதப்படும் இடங்களில் முதல்வரின் பிரச்சாரத்திற்கு திரண்ட கூட்டத்தை பார்க்கும்போது, அ.ம.மு.கவின் வருகை அ.தி.மு.க வாக்கு வங்கியை கணிசமாக பாதிக்கும் என்று கூறியவர்களின் கருத்தை தகர்க்கும் வகையில் அமைந்திருப்பதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.
சமூக ரீதியிலான வாக்குகள் அமமுகவுக்குக் கிடைக்கும்,அதிமுகவுக்கு கிடைக்காது என்ற கூற்றையும் இந்தக் கூட்டம் தகர்க்கும் வகையில் உள்ளதாகவும் அதிமுகவினர் பெருமையுடன் கூறுகின்றனர்.