மதுரையை வளைக்கும் திமுக.. அங்கே ஏன் திமுக பொதுக்குழு? 1977க்கு பிறகு சம்பவம் செய்யும் ஸ்டாலின்.. பலே
மதுரை: மதுரையில் இன்று நடக்கும் பொதுக்குழுவானது, திமுகவுக்கு மிக முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.. இந்த முறை மதுரையில் பொதுக்குழுவை திமுக நடத்த காரணம் என்ன? இந்த வியூகம் எந்த அளவுக்கு திமுகவுக்கு தேர்தலில் கை கொடுக்கும்? என்று தெரியவில்லை.. எனினும், இன்றைய தினம் முதல்வரின் ரோடு ஷோ நடைபெற உள்ளதால், மதுரை மாநகரமே பரபரப்பாக காணப்படுகிறது.
வழக்கமாக திமுக எந்தவொரு முக்கிய நிகழ்வென்றாலும் திருச்சியை மையப்படுத்தியே நடத்தும்.. அல்லது கோவை மாவட்டத்தில் திட்டமிடுவது வழக்கம்.. அதிலும் பொதுக்குழு கூட்டங்கள் பெரும்பாலும் சென்னை அண்ணா அறிவாலயத்திலேயே நடைபெறும்.

பொதுக்குழு கூட்டம் ஏற்பாடு
அதேபோல, பொதுக்கூட்டம் நடத்துவதாக இருந்தாலும், திருச்சி, கோவையே பிரதானமாக கருதப்படும்.. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திருச்சியில் பொதுக்கூட்டத்தையும், எம்பி தேர்தலின் வெற்றி கூட்டத்தை கோவையிலும் நடத்தியிருந்தது.. இப்போது விரைவில் சட்டமன்ற தேர்தல் வருவதால், மீண்டும் தென்மாவட்டத்தையே குறி வைத்து நகர துவங்கியிருக்கிறது.
1977-க்கு பிறகு
அந்தவகையில், இந்த முறை பொதுக்குழு கூட்டத்தை மதுரையில் நடத்த முடிவு செய்துள்ளது... கடந்த 1977-ல் மதுரையில் பொதுக்குழு நடந்தது.. இந்த பொதுக்குழு கூட்டத்தில்தான், திமுக பொதுச் செயலாளராக பேராசிரியர் அன்பழகனும், பொருளாளராக சாதிக் பாஷாவும் தேர்வு செய்யப்பட்டனர்.
1977க்கு பிறகு மதுரையில் தற்போதுதான் திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. திமுக பொதுக்குழுவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளும் உச்சக்கட்ட தீவிரத்தில் உள்ளன..
மதுரையில் பொதுக்குழு நடத்த சில காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.. அதாவது, இந்த முறை அதிமுக, பாஜக கூட்டணி இணைந்து செயல்பட போவதால், திமுக கூட்டணிக்கு எந்த சேதமும் வராத வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம்..
என்ன காரணம்
டங்ஸ்டன் விவகாரத்தில் திமுகவின் உறுதியான நிலைப்பாடு காரணமாக, மதுரை மக்களிடத்தில் திமுக . கூடுதல் செல்வாக்கு பெற்றிருக்கிறது.. இதனை மையப்படுத்தியே பொதுக்குழுவுக்கு மதுரையை முதல்வர் தேர்ந்தெடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.
அதேபோல,இளைஞர்கள், பெண்களை திமுக பக்கம் ஈர்க்கும் வகையில், சில அறிவிப்புகள் வெளிவரலாம் என்கிறார்கள்.. குறிப்பாக, பெண்கள், இளைஞர்களுக்கு சில பதவிகள் தரப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. அதேபோல, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், துணை பொதுச் செயலாளர்களின் எண்ணிக்கையையும் உயர்த்த திமுக திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
தீர்மானங்கள் - முடிவுகள்
மற்றொருபுறம், வயது மூப்பால் சரிவர கட்சி பணி செய்ய முடியாதவர்கள். கட்சி வளர்ச்சிக்கு பெரிதும் உழைக்காதவர்களை, முதல்வர் ஸ்டாலின் நீக்கவும் முடிவு செய்துள்ளாராம்.. அதுமட்டுமல்ல, வரப்போகும் தேர்தலில் வெற்றி பெற என்னென்ன செய்ய வேண்டும் என்ற அறிவுரைகளையும் முதல்வர் வழங்கக்கூடும்.
எனவே, இந்த பொதுக்குழுவில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களும், முடிவுகளும் எப்படி இருக்க போகின்றன என்ற எதிர்பார்ப்பு கூடி வருகிறது.
மொத்தத்தில், தென்மண்டல தலைநகரமாக மதுரை விளங்குவதால், இன்றைய தினம் நடைபெறக்கூடிய இந்த பொதுக்குழு கூட்டம், சட்டமன்றத் தேர்தலுக்கு திமுகவை வலுப்படுத்தவும், ஆயத்தப்படுத்தி கொள்ளவும், ஒரு முன்னோட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications