ஹெல்மெட் அணியாமல் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர்... நோட்டீஸ் அனுப்பிய மதுரை ஹைகோர்ட்!
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற புகாரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உயர்நீதிமன்றக்கிளை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மதுரை: ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற புகாரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உயர்நீதிமன்றக்கிளை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இருசக்கர வாகனத்தில் செல்வோர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்திருக்கும் நபரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சாலை விபத்து உயிரிழப்புகளை தவிர்க்க மாநில அரசு சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், புதுக்கோட்டையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்றார். இதுகுறித்து டிராபிக் ராமசாமி மதுரை ஹைகோர்ட் பென்சில் வழக்கு தொடுத்தார்.
அவர் தொடர்ந்த வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் டிசம்பர் 17-க்குள் பதில்தர உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் சர்ச்சையில் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications