Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு நிலத்தில் முருகன் சிலையும் வேண்டாம்.. சிலுவையும் வேண்டாம்.. ஹைகோர்ட் நீதிபதிகள் சொன்ன கருத்து!

Subscribe to Oneindia Tamil

மதுரை: கன்னியாகுமரியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் முருகன் சிலையும் வைக்க வேண்டாம், சிலுவையும் வைக்க வேண்டாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஒட்டுக்குழி கிராமத்தைச் சேர்ந்த சில்வன் என்பவர், மதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், கன்னியாகுமரி மாவட்டம் பைங்குளம் கிராம மலை உச்சியில் இருந்த முருகன் சிலையை அகற்றும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்பின் அந்த முருகன் சிலை மலை உச்சியில் இருந்து அகற்றப்பட்டது.

Madurai High Court

இது சட்டவிரோதம். இதனால் அந்த சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதனை விசாரித்த தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், முருகன் சிலையை மீண்டும் அங்கு வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் மனுதாரர், முருகன் சிலை 100 ஆண்டுகள் பழமையானது என்று கூறி இருக்கிறார். ஆனால் 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட டிரோன் வீடியோவில் மலை உச்சியில் முருகன் சிலை இல்லை. இதுதொடர்பான ஆவணங்களை மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. எனவே தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சம்பந்தப்பட்ட நிலம் யாருக்கு சொந்தமானது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, அந்த நிலம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் என்று கூறினார். அதேபோல் இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், நிலம் அரசுக்கு சொந்தமானது என்ற போது, அங்கு சிலுவையும் வேண்டாம்.. முருகன் சிலையும் வேண்டாம் என்று கூறினர். தொடர்ந்து, இதுதொடர்பாக தாக்கலான அனைத்து மனுக்களையும் சேர்த்து விசாரிக்கப்படும் என்று கூறி வழக்கின் விசாரணையை டிசம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கிலும் தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலையில் உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி கொடுத்து உத்தரவிட்டார். இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கும், இதே அமர்வு முன்பாக விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+