மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி
மதுரை: மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணனுக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. பொதுமக்கள், அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் என பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டுவருகிறார்கள்.
நேற்று கரூர் மாவட்டம் குளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் சோழவந்தான் அதிமுக எம்எல்ஏ மாணிக்கத்துக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதேபோல், மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகனுக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று!!
இன்று மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் தற்போதைய நிலையில் 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.