3 நிமிஷம் லேட்டா வந்தா குற்றமா.. கம்பி கேட்டுக்கு வெளியே நிற்க வைத்த வேலம்மாள்.. மதுரையில் ஷாக்!
வேலம்மாள் பள்ளியில் மாணவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது
Recommended Video
மதுரை: 3 நிமிஷம் ஸ்கூலுக்கு லேட்டாக வந்துட்டாங்களாம் பிள்ளைகள். அதுக்காக இரும்பு கேட்டுக்கு வெளியே நிக்க வெச்சு தண்டனை தந்திருக்கிறார்கள். அதுவும் 3-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு.. கண்டிப்புக்கும், ஒழுங்குக்கும் பெயர் போன மதுரை வேலம்மாள் பள்ளியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சென்னை முகப்பேரில் 33 வருஷங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட வேலம்மாள் பள்ளிக்கூடம், இன்று பல மாவட்டங்களில் 40 பள்ளிக்கூடங்களாக, கல்லூரிகளாக, ஆஸ்பத்திரியாக உயர்ந்து உள்ளது.

நல்ல காசு.. நல்ல படிப்பு.. ஒழுக்கம்.. ரொம்ப கண்டிப்பு.. இதெல்லாம்தான் வேலம்மாள் பள்ளிக்கூடத்தை இந்த அளவுக்கு அசுர வளர்ச்சி பெற வைத்தது.
ஆனால் இந்த கண்டிப்பு இப்போது ஓவர் டோஸ் ஆகிவிட்டது. மதுரையில் உள்ள வேலம்மாள் பள்ளியில் லேட்டாக 3-ம் வகுப்பு மாணவர்கள் வந்துள்ளனர். வெறும் 3 நிமிஷம் லேட்டுதான். அதற்காக அந்த பிள்ளைகளை இரும்பு கேட்டுக்கு வெளியே நிறுத்தி தண்டனை தந்திருக்கிறார்கள்.
ஸ்கூல் கேட்டை மூடிவிட்டால் பிள்ளைகளுக்கு எப்படி பாதுகாப்பு? ரோட்டில் ஏதாவது குழந்தைகளுக்கு நேர்ந்தால் யார் பொறுப்பு? பள்ளியை நம்பிதானே பெற்றவர்கள் பிள்ளைகளை அனுப்பி வைக்கிறார்கள்?
இப்படித்தான் 2 குழந்தைகள் காலை முதல் மாலை வரை வெயிலில் காய்ந்து போய் நின்று கொண்டு இருந்திருக்கிறார்கள். ஒரு நிமிஷம் லேட்டாக வந்துவிட்டால் கேட் மூடி விடுவார்களாம். கட்டுப்பாடு என்றாலும் அதற்கு ஒரு அளவு வேண்டாமா?
நேரம் தவறாமல் வரவேண்டும் என்றால், இப்போதுள்ள காலக்கட்டத்தில், இப்போதிருக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு எப்படி ஒத்துவரும்? என்பது தெரியவில்லை. ஆனால் எந்த கட்டுப்பாட்டுக்கு வேலம்மாள் பெயர் வாங்கியதோ, இப்போதே அதே கட்டுப்பாடுகளுக்கு பெற்றோர் மற்றும் பொதுமக்களின் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications